/* */

நாகர்கோவில் மாநகராட்சி முதல் மேயர் பதவியை திமுக கைப்பற்றியது

குமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சியின் முதல் மேயர் பதவியை திமுக கூட்டணி கைப்பற்றியது.

HIGHLIGHTS

நாகர்கோவில் மாநகராட்சி முதல் மேயர் பதவியை திமுக கைப்பற்றியது
X

நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்ற நிலையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவி குறித்த பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.

நகராட்சியாக இருந்து மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டு முதன் முதலாக மேயர் மற்றும் மாமன்ற உறுப்பினர்களுக்காக நடைபெறும் தேர்தல் என்பதால், மேயர் பதவியை தக்க வைத்து கொள்வதில் கடும் போட்டி நிலவி வந்தது.

இந்நிலையில் நாகர்கோவில் மாநகராட்சியின் 52 வார்டுகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி 52 வார்டுகளில் திமுக 24 வார்டுகளிலும், அதிமுக 7 வார்டுகளிலும், காங்கிரஸ் 7 வார்டுகளிலும், பாஜக 11 வார்டுகளிலும், சுயேட்சை 2 வார்டுகளிலும், மதிமுக 1 வார்டுகளிலும், வெற்றி பெற்றுள்ளது.

மேயர் பதவிக்கு 27 இடங்கள் தனி மெஜாரிட்டி என்ற நிலையில் 24 இடங்களில் வெற்றி பெற்ற திமுக மேயர் பதவியை அலங்கரிக்கும் என்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் கட்சி துணை மேயர் பதவியை அலங்கரிக்கும் என கணிக்கப்படுகிறது.

Updated On: 22 Feb 2022 12:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஒட்டிய உறவாக வந்த உடன்பிறந்தோர் தின வாழ்த்துகள்..!
  2. வீடியோ
    SavukkuShankar-ரை அவமதித்த பெண் காவலர்கள் !#seeman #seemanism...
  3. வீடியோ
    Vetrimaaran சாதி இயக்குனர் Seeman சொன்ன பதில் !#seeman #seemanism...
  4. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  5. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  6. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  7. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  8. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  9. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  10. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!