/* */

காணாமல் போன செல்போன்கள், கண்டுபிடித்து ஒப்படைத்த காவல்துறை

குமரியில் காணாமல் போன 9 லட்சம் ரூபாய் மதிப்பிலான செல்போன்களை காவல்துறையினர் கண்டு பிடித்து, உரியவர்களிடம் ஒப்படைத்தனர்.

HIGHLIGHTS

காணாமல் போன செல்போன்கள், கண்டுபிடித்து ஒப்படைத்த காவல்துறை
X

குமரியில் காணாமல் போன நூறு செல்போன்களை கண்டுபிடித்து உரியவர்களிடம் போலீஸ் எஸ்.பி பத்ரி நாராயணன் வழங்கினார்.

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் செல்போன் காணாமல் போனதாக பல்வேறு புகார் மனுக்கள் பெறப்பட்டது.

அந்த புகார் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் உத்தரவின்படி அவருடைய நேரடி மேற்பார்வையில் இயங்கும் சைபர் கிரைம் பிரிவு போலீசார் காணாமல் போன செல்போன்களை மீட்கும் பணியில் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டு வந்தனர்.

அதன் தொடர் நடவடிக்கையாக தற்போது சுமார் 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 100 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டது, மேற்படி கண்டுபிடிக்கப்பட்ட செல்போன்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உரிய நபர்களிடம் இன்று ஒப்படைத்தார்.

இந்த செல்போன்களை கண்டுபிடிக்க காரணமாக சைபர் கிரைம் பிரிவு போலீசாரை காவல் கண்காணிப்பாளர் வெகுவாக பாராட்டினார், மேலும் செல்போன் காணாமல் போனதாக பெறப்பட்ட நிலுவையில் இருக்கும் புகார் மனுக்கள் மீது துரித நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த வருடத்தில் மட்டும் இதுவரை 360 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Updated On: 23 Aug 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. அரசியல்
    மோடியை பார்த்து நடுங்கும் சீனா, செய்யும் குழப்பங்கள்..!?
  2. மேலூர்
    மதுரை,சுபிக்சம் மருத்துவமனையில், மருத்துவ விழிப்புணர்வு முகாம்..!
  3. மேலூர்
    மதுரை கோயில்களில் பஞ்சமி வராகியம்மன் சிறப்பு பூஜை..!
  4. தேனி
    முல்லைப்பெரியாறு அணையில் 152 அடி தண்ணீர் தேக்கினால் மட்டுமே....??
  5. லைஃப்ஸ்டைல்
    முதல்ல குழந்தை மனசை புரிஞ்சிக்குங்க..! குழந்தை வளர்ப்பு டிப்ஸ்..!
  6. வீடியோ
    சினிமாவ மொத்தமா அழிச்சிட்டானுங்க || பா.ரஞ்சித் மேல் சீரிய...
  7. லைஃப்ஸ்டைல்
    பொருளாதாரமே வாழ்க்கை அல்ல... பொருளாதாரம் இல்லாமலும் வாழ்க்கை இல்லை
  8. சோழவந்தான்
    கொண்டையம்பட்டி தில்லை சிவ காளியம்மன் கோவில் வளையல் உற்சவ திருவிழா
  9. ஈரோடு
    ஈரோட்டில் புகையிலை பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த 3 கடைகளுக்கு...
  10. இராஜபாளையம்
    ராஜபாளையம் அருகே திமுக சார்பில் நீர்மோர் பந்தல் திறந்து வைத்த