/* */

கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட கூட்டம் - காற்றில் பறந்தது சமூக இடைவெளி

மனு பெறும் நாளை முன்னிட்டு, குமரி ஆட்சியர் அலுவலகத்தில் சமூக இடைவெளியை மறந்து மக்கள் குவிந்தனர்.

HIGHLIGHTS

கலெக்டர் அலுவலகத்தில் திரண்ட கூட்டம் -  காற்றில் பறந்தது சமூக இடைவெளி
X

நாகர்கோவிலில் உள்ள  குமரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிப்பதற்காக, சமூக இடைவெளியின்றி திரண்ட மக்கள்.

கன்னியாகுமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், திங்கள்கிழமை தோறும் பொதுமக்கள் மனு அளிக்கும் நாள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் இன்று, நாகர்கோவிலில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், மனு அளிப்பதற்காக காலை முதலே ஏராளமானோர் வருகை தந்த நிலையில் பொதுமக்களின் கூட்டத்தால் ஆட்சியர் அலுவலகம் பரபரப்புடன் காணப்பட்டது.

ஒரு மனு அளிப்பதற்கு 10 முதல் 20 நபர்கள் வரை வந்த நிலையில், பல்வேறு மனுக்களை அளிக்க வந்தவர்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கூடி நின்றனர். பலர் முகக்கவசம் அணியாமல் இருந்தாலும் நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டது. மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயிலில் போலீசார் பாதுகாப்பு பணியில் நின்று இருந்தாலும், பலர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கூடியது பாதுகாப்பு இல்லாததை காட்டியது.

Updated On: 20 Sep 2021 3:00 PM GMT

Related News

Latest News

  1. கல்வி
    12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்! திருப்பூர் மாவட்டம் முதலிடம்
  2. காஞ்சிபுரம்
    கருணை காட்டிய கோடை மழை! மகிழ்ச்சியில் காஞ்சிபுரம் மக்கள் !
  3. தென்காசி
    தென்காசி மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட பெயிண்டிங் காண்ட்ராக்டர்கள் தொழிலாளர்கள் ஆலோசனைக்
  5. ஈரோடு
    ஈரோடு: பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 63 கன அடி
  6. ஈரோடு
    கள்ளிப்பட்டி அருகே தோட்டத்துக்குள் புகுந்து முள்ளம்பன்றியை வேட்டையாடிய...
  7. திண்டுக்கல்
    நாளை முதல் கொடைக்கானல் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ்
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் இடி மின்னலுடன் கோடை மழை! வெப்பம் தணிந்ததால் மக்கள்...
  9. ஆன்மீகம்
    Horoscope Today அனைத்து ராசிக்கான இன்றைய ராசிபலன்
  10. செங்கம்
    உடல் உறுப்புகள் தானம் செய்தவரின் உடலுக்கு ஆட்சியர் நேரில் மரியாதை