எல்லா ஞாயிற்றுகிழமையும் கேரளா பேருந்துகள் இயங்கும் -மக்கள் மகிழ்ச்சி
கொரோனா, ஓமிக்கிரான், மற்றும் பறவை காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்து வந்த கேரளா மாநிலத்தில் நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஞாயிற்று கிழமை முழு ஊராடங்கை அறிவித்து உத்தரவு பிறப்பித்தது கேரளா அரசு. இதன் காரணமாக கடந்த 6 வாரங்களாக கேரளாவில் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது.
தமிழகத்தில் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஞாயிற்று கிழமைகளில் தமிழக அரசு பேருந்துகள் இரு மாநில எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக பல்வேறு காரணங்களால் கேரளா செல்பவர்கள் மற்றும் கேரளாவில் இருந்து தமிழகம் திரும்புவார்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். இந்நிலையில் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு உத்தரவை கேரள அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இனி எல்லா ஞாயிற்று கிழமைகளில் கேரளா தமிழகம் இடையிலான அரசு பேருந்துகளின் சேவை வழக்கம் போல் நடைபெறும். அதன்படி நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு தமிழக அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும். அதே போன்று கேரளா அரசு பேருந்துகளும் கன்னியாகுமரி மாவட்டம் வரும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu