/* */

எல்லா ஞாயிற்றுகிழமையும் கேரளா பேருந்துகள் இயங்கும் -மக்கள் மகிழ்ச்சி

இனி எல்லா ஞாயிற்று கிழமையும் கேரளாவிற்கு அரசு பேருந்துகள் இயங்கும் என்ற அறிவிப்பால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

எல்லா ஞாயிற்றுகிழமையும் கேரளா பேருந்துகள் இயங்கும் -மக்கள் மகிழ்ச்சி
X

கொரோனா, ஓமிக்கிரான், மற்றும் பறவை காய்ச்சல் தொடர்ந்து அதிகரித்து வந்த கேரளா மாநிலத்தில் நோய் தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஞாயிற்று கிழமை முழு ஊராடங்கை அறிவித்து உத்தரவு பிறப்பித்தது கேரளா அரசு. இதன் காரணமாக கடந்த 6 வாரங்களாக கேரளாவில் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வந்தது.

தமிழகத்தில் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்ட நிலையில் ஞாயிற்று கிழமைகளில் தமிழக அரசு பேருந்துகள் இரு மாநில எல்லையான களியக்காவிளை வரை மட்டுமே இயக்கப்பட்டு வந்தது. இதன் காரணமாக பல்வேறு காரணங்களால் கேரளா செல்பவர்கள் மற்றும் கேரளாவில் இருந்து தமிழகம் திரும்புவார்கள் பெரும் பாதிப்பை சந்தித்தனர். இந்நிலையில் ஞாயிற்று கிழமை முழு ஊரடங்கு உத்தரவை கேரள அரசு திரும்பப் பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து இனி எல்லா ஞாயிற்று கிழமைகளில் கேரளா தமிழகம் இடையிலான அரசு பேருந்துகளின் சேவை வழக்கம் போல் நடைபெறும். அதன்படி நாகர்கோவில் பேருந்து நிலையத்தில் இருந்து கேரளா மாநிலம் திருவனந்தபுரத்திற்கு தமிழக அரசு பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும். அதே போன்று கேரளா அரசு பேருந்துகளும் கன்னியாகுமரி மாவட்டம் வரும் என்பதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

Updated On: 15 Feb 2022 1:50 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் அம்மை நோய் ஏற்பட்டால் குணப்படுத்த என்ன செய்யலாம்?
  2. இந்தியா
    சர்வதேச செவிலியர் தினம்: இந்திய ராணுவம் கொண்டாட்டம்
  3. தொழில்நுட்பம்
    3டி அச்சிடப்பட்ட ராக்கெட் எஞ்சினை வெற்றிகரமாக சோதித்த இஸ்ரோ: 3டி...
  4. தொழில்நுட்பம்
    எலெக்ட்ரிக் பறக்கும் டாக்சி, e200..! ஐஐடி மெட்ராஸ் சாதனை..!
  5. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலிருந்து எலக்ட்ரானிக் சாதனங்களை பாதுகாப்பது எப்படி?
  6. வணிகம்
    விரைவில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வழக்கமான விமான சேவையை தொடரும்:...
  7. லைஃப்ஸ்டைல்
    கல்லூரிகளில் மதிப்பெண்களை வைத்து பாடப்பிரிவை தேர்ந்தெடுப்பது எப்படி?
  8. வீடியோ
    ஒரே நாளில் 25,000 கிலோ தங்கம் |என்ன நடக்கிறது தமிழகத்தில்?#gold...
  9. இந்தியா
    28,200 மொபைல் இணைப்புகளை துண்டிக்க தொலைத்தொடர்பு துறை உத்தரவு
  10. வீடியோ
    🔴LIVE : சென்னை விமான நிலையத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேட்டி ||...