/* */

கன்னியாகுமரி: மெஷினில் எடை போட்டு கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது

குமரியில் மெஷினில் எடை போட்டு கஞ்சா விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

கன்னியாகுமரி: மெஷினில் எடை போட்டு கஞ்சா விற்பனை செய்த 3 பேர் கைது
X

கைதானவர்கள்.

கன்னியாகுமரி மாவட்டம், கொல்லங்கோடு சுற்றுவட்டார பகுதி சங்குருட்டி பகுதியில், 3 பேர் சந்தேகப்படும் படி நின்று கொண்டிருந்தனர். அவர்களை விசாரித்த போலீசார், அவர்களிடம் பொருட்கள் எடை போடும் ஒரு மெஷின் மற்றும் ஒரு பை இருந்துள்ளதை கண்டனர்.

அது சம்பந்தமாக, 3 பேரிடம் போலீசார் விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளனர். சந்தேகமடைந்த போலீசார் அவர்களிடம் இருந்த பையை பிரித்து பார்த்த போது, 1 கிலோ மதிப்பிலான கஞ்சா இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அந்த 3 பேரையும் கைது செய்தனர். 1 கிலோ கஞ்சா மற்றும் எடை மெஷினையும் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், அவர்கள் குழித்துறை பகுதியை சேர்ந்த அர்ஷத் அலி 20, அழகியபாண்டிபுரம் பகுதியை சேர்ந்த ஜோண் கிறிஸ்டோபர் 32, களியக்காவிளை பகுதியை சேர்ந்த ஆண்டணி தாஸ் 38 என்பதும், கேரளாவில் இருந்து கஞ்சாவை வாங்கி கொல்லங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வந்ததும் தெரியவந்தது.

Updated On: 7 Oct 2021 2:30 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கைன்னா என்னங்க ..? எப்படி வாழலாம்..?
  2. லைஃப்ஸ்டைல்
    மே 24 ! தேசிய சகோதரர்கள் தினம். கொண்டாடலாம் வாங்க
  3. லைஃப்ஸ்டைல்
    அன்பு தம்பிகளுக்கு அண்ணாவின் பொன்மொழிகள்
  4. வீடியோ
    🔥 Delhi-யில் அடித்த Annamalai அலை!😳 மிரண்டுபோன BJP தலைமை |...
  5. லைஃப்ஸ்டைல்
    தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
  6. நாமக்கல்
    ப.வேலூர் தர்காவில் மழைவேண்டி முஸ்லீம்கள் சிறப்பு தொழுகை
  7. நாமக்கல்
    பரமத்தி அருகே குடும்ப பிரச்சினையால் கட்டிட மேஸ்திரி தூக்கிட்டு ...
  8. உலகம்
    பூமி தன்னை பார்த்துக் கொள்ளும் ; மனிதனே உன்னை பார்த்துக்கொள்..!
  9. நாமக்கல்
    ப.வேலூரில் போலீசாருக்கு யோகா மற்றும் தியானப் பயிற்சி முகாம்..!
  10. க்ரைம்
    பொன்னேரி அருகே வீட்டின் முன் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட பெண்...