2வது மனைவிக்கு முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தையை கொல்ல துணிந்த 2ம் கணவர்

2வது மனைவிக்கு முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தையை கொல்ல துணிந்த 2ம் கணவர்
குமரியில் இரண்டாவது மனைவிக்கு முதல் கணவர் மூலம் பிறந்த குழந்தையை கொல்ல துணிந்த இரண்டாம் கணவரால் பரபரப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் அருமனை அருகே மாலைக்கோடு பகுதியை சேர்ந்தவர் ஹரி, இவர் கேரளாவில் முடி திருத்தும் கடைக்கு வேலைக்கு சென்ற போது அங்கு திருமணம் ஆகி கணவரை விட்டு பிரிந்து கை குழந்தையுடன் இருந்த அனுஷா என்ற பெண்ணை கடந்த இரண்டு வருடங்களுக்கு முன் இரண்டாவதாக திருமணம் செய்து அழைத்து வந்ததாக கூறப்படுகிறது.

பின்னர் கன்னியாகுமரி மாவட்டம் புத்தன் சந்தை பகுதியில் ஹரி தொழில் செய்து வந்த நிலையில் ஹரியின் அனுஷா பிரசவத்திற்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் ஹரியுடன் வீட்டில் இருந்த குழந்தையை கொலை செய்யும் நோக்கில் குழந்தையை கொடூரமாக தாக்கிய ஹரி சிகரட்டால் குழந்தையின் உடலில் பல்வேறு இடங்களில் சூடு வைத்துள்ளார்.

இதனிடையே குழந்தையின் அலறல் சத்தம் கேட்டு ஹரியின் வீட்டிற்கு வந்த அக்கம்பக்கத்தினர் படுகாயங்களுடன் இருந்த குழந்தையை மீட்ட பொதுமக்கள், குழந்தையை இடைக்கோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

ஆனால் காயங்கள் அதிகமாக இருப்பதால் மேல்சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல மருத்துவர்கள் அறிவுறுத்திய நிலையில் ஹரியின் பெற்றோர்கள் மற்றும் நண்பர்கள் தங்கள் அழைத்து செல்வதாக பொய் கூறி விட்டு குழந்தையை மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வீட்டிற்கு கொண்டு சென்றதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்து சம்பவ இடம் வந்த அருமனை போலீசார் விசாரித்து விட்டு, ஹரி மீது நடவடிக்கை எடுக்காமல் ஹரியை தப்பிக்க வைக்கும் நோக்கில் செயல்படுவதாகவும் குழந்தைக்கு சிகிச்சை அளிக்க எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.

ஏற்கனவே இது தனக்கு பிறந்த குழந்தை இல்லை என கூறி ஹரி குழந்தையை பலமுறை தாக்கி உள்ள நிலையில் இப்போது கொடூர தாக்குதலில் ஈடுபட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் குழந்தை மீது கொடூர தாக்குதல் நடத்திய ஹரி மீது வழக்கு பதிவு செய்வதோடு அக்குழந்தையை மீட்டு கேரளாவில் உள்ள அனிஷாவின் வீட்டாரிடமாவது ஒப்படைத்தால் மட்டுமே அக்குழந்தை சித்திரவதைகள் இன்றி வாழ இயலும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் கொடூர தாக்குதலில் படுகாயங்களுடன் காணப்படும் குழந்தையின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Tags

Next Story