கேரளாவில் தாெடர் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு

கேரளாவில் தாெடர் கனமழை: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
X
இடைவிடாது பெய்யும் கனமழையால் கேரளா மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு அடைந்துள்ளது.

கேரளா திருவனந்தபுரம் மாவட்டத்தில் பலத்த காற்று மற்றும் இடி, மின்னலுடன் கூடிய தொடர் கனமழை பெய்து வருகிறது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 14 ஆம் தேதி வரை தென்மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில் திருவனந்தபுரம் மாவட்டத்தில் நெய்யாற்றின்கரை, பாலராமபுரம், அட்ட குளங்கரா, கிள்ளிப்பாலம், தம்பானூர் உட்பட மாவட்டம் முழுவதும் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. மேகம் கருமேகமாக காட்சியளித்து இருள் சூழ்ந்த காணப்படும் நிலையில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் திருவனந்தபுரம் மாவட்டத்தில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலுமாக பாதிப்பை சந்தித்து உள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!