Begin typing your search above and press return to search.
கொரோனா வைரஸ் பரவலை தடுக்க விழிப்புணர்வு பிரச்சாரம்.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று இரண்டாம் அலை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. முதல் அலையை விட இரண்டாம் கட்ட பரவலில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இதனால் பொதுமக்கள் மத்தியில் கடும் அச்சம் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில் குமரி மாவட்டம் முழுவதுமுள்ள 56 பேரூராட்சி மற்றும் 95 ஊராட்சிகளில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் மேற்கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் அரவிந்த் உத்தரவிட்டிருந்தார் .
இதனையடுத்து கரும்பாட்டூர் ஊராட்சியில் இன்று நடைபெற்ற வாகன விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஊராட்சி தலைவி தங்கமலர் சிவபெருமான் தொடங்கி வைத்தார் .
இதில் அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றிய வட்டார வளர்ச்சி அலுவலர் இங்கர்சால்,துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆனந்த விஜயன் ,ஊராட்சி செயலர் காளியப்பன் ஆகியோர் கலந்து கொண்டனர்.