/* */

ரேஷன் கடையில் அரிசி வழங்குவதில் முறைகேடு: பொதுமக்கள் வாக்குவாதம்

குமரியில் ரேஷன் கடையில் அரிசி வழங்குவதில் முறைகேடு நடைபெற்ற நிலையில் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ரேஷன் கடையில் அரிசி வழங்குவதில் முறைகேடு: பொதுமக்கள் வாக்குவாதம்
X

ரேஷன் கடை ஊழியரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்.

கன்னியாகுமரி மாவட்டம், நடைக்காவு பகுதியில் செயல்பட்டு வரும் அரசு நியாயவிலை கடையில் பொதுமக்களுக்கு வழங்கக்கூடிய அரசியின் அளவை குறைத்து வழங்கி அங்கு பணியில் இருந்த பணியாளர் முறைகேட்டில் ஈடுபட்டு வந்துள்ளார். இதுகுறித்து பொதுமக்கள் கேட்க சென்றால் அவர்களை அவமரியாதையாக பேசி வந்துள்ளார்.

இந்நிலையில் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் ரேஷன் கடையில் வழங்கப்பட்ட 40 கிலோ அரிசியை வேறொரு கடையில் சென்று தூக்கி பார்த்தபோது அதில் 3 கிலோ அரிசி குறைவாக இருந்துள்ளது.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த நபர் கடைக்கு சென்று விற்பனையாளரிடம் அரிசி குறைந்ததற்க்கான காரணத்தை கேட்டு அதனை வீடியோவாக எடுத்துள்ளார் .

அப்போது அந்த ஊழியர் அப்படித்தான் இருக்கும்; வேண்டுமென்றால் அங்கு சென்று கேள் என அஜாக்கிரதையாக பதில் கூறியுள்ளார்.

இது போன்று பலரிடம் இருந்து அரிசியை குறைத்து எடுத்து வெளியே விற்பனை செய்து முறைகேட்டில் ஈடுபட்டு வருவதாக மக்கள் குற்றம்சாட்டும் நிலையில் இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Updated On: 5 Jan 2022 3:30 PM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    குலதெய்வ வழிபாடு..! ரத்த உறவு திருமணம் ஏன் கூடாது..? ஒரு அறிவியல்...
  2. அரசியல்
    டில்லியில் ஆம் ஆத்மி வெற்றிபெற முடியுமா..? களநிலவரம் என்ன?
  3. கிணத்துக்கடவு
    போத்தனூரில் மழை நீருடன் கழிவு நீரும் சேர்ந்து சாலையில் தேங்கியதால்...
  4. இந்தியா
    பிரதமர் மோடி தனது பணத்தை எங்கே முதலீடு செய்கிறார்? வேட்புமனுவில்
  5. தமிழ்நாடு
    வெஸ்ட் நைல் காய்ச்சல்! சுகாதாரத்துறை எச்சரிக்கை
  6. கோவை மாநகர்
    பந்தயசாலை காவல் நிலையத்தில் சவுக்கு சங்கர் மீது வழக்குப்பதிவு
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை; இன்றைய காய்கறி பழங்கள் விலை
  8. ஈரோடு
    கடம்பூர் வனப்பகுதியில் இருசக்கர வாகனத்தை உதைத்து பந்தாடிய காட்டு...
  9. கீழ்பெண்ணாத்தூர்‎
    கீழ்பெண்ணாத்தூர் முத்தாலம்மன் கோயில் கூழ் வார்த்தல் திருவிழா
  10. நாமக்கல்
    தனியார் ரிசார்ட் வாடிக்கையாளருக்கு 10 ஆண்டுகள் கட்டணமின்றி அறை வழங்க...