/* */

குமரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்கள் பறிமுதல்: போலீசார் அதிரடி

குமரியில் கட்டு கட்டாக தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்களை பறிமுதல் செய்து போலீசார் நடவடிக்கை.

HIGHLIGHTS

குமரியில் தடை செய்யப்பட்ட புகையிலை பண்டல்கள் பறிமுதல்: போலீசார் அதிரடி
X

தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்ட குட்கா புகையிலை பொருட்களை சட்ட விரோதமாக விற்பனை செய்வதை தடுக்க மாவட்டம் தோறும் போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறார்கள். அதன் தொடர்ச்சியாக கன்னியாகுமரி மாவட்டத்திலும் போலீசார் தனிப்படை அமைத்து வானக சோதனை உட்பட பல்வேறு சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் கொட்டாரம் பகுதியில் தனிப்படை போலீசார் சோதனையில் ஈடுப்பட்டு இருந்த பொழுது அவ்வழியாக சந்தேகம் படும்படியாக கையில் பார்சலுடன் வந்த நபரை பிடித்து சோதனை செய்தனர். அப்போது அவர் கண்ணன்குளம் பகுதியை சேர்ந்த நடராஜன் என்பதும் அங்கு பலசரக்கு கடை நடத்தி வரும் அவர் விற்பனை செய்வதற்காக பையில் அரசால் தடை செய்யப்பட்ட புகையிலையை கொண்டு சென்றதும் தெரிய வந்தது.

இதனை தொடர்ந்து அவரிடம் இருந்த நான்கு கிலோ புகையிலை மற்றும் ரொக்க பணம் பன்னிரெண்டாயிரத்தை தனிப்படை போலீசார் பறிமுதல் செய்ததோடு அவரையும் கைது செய்தனர். இதே போன்று மாவட்டம் முழுவதும் போலீசார் நடத்திய சோதனையில் கட்டு கட்டாக புகையிலை பண்டல்களை பறிமுதல் செய்து உள்ளனர்.

Updated On: 4 Dec 2021 2:26 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நாம் யார் என்பதை உணர்ந்தால் அதுவே நமக்கான பாத்திரம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    நமக்கான சண்டையில் கூட உன்னிடம் தோற்பதை ரசிக்கிறேன்..! கணவனின்...
  3. வீடியோ
    கோவிலுக்கு போகமா தருதலையா சுத்தறதா? மிஷ்கினை வச்சி செய்த பெரியவர்!...
  4. வீடியோ
    ராகவா லாரன்ஸ்-ஐ புகழ்ந்து தள்ளிய சூப்பர் ஸ்டார் | #ragavalawrence |...
  5. லைஃப்ஸ்டைல்
    நேர்காணும் தெய்வம், அம்மா..!
  6. லைஃப்ஸ்டைல்
    அக்கா உள்ளவன் மக்காக இருக்க மாட்டான்..!
  7. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையில் வரும் துன்பங்கள் நிரந்தரம் அல்ல...பனி போல் விலகும்
  8. வீடியோ
    மிஷ்கின் படத்தில எல்லாமே violenceஅது societyக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    ‘நாம் வாழும் ஒவ்வொரு நொடியும் மதிப்புமிக்கது’
  10. லைஃப்ஸ்டைல்
    உணர்ச்சிகளை உரக்கச் சொல்லும் உன்னத மேற்கோள்கள்