/* */

மாமிசக் கழிவுகளை கொட்ட வந்த வாகனம் - பொறி வைத்து பிடித்த பொதுமக்கள்

குமரியில் மாமிச கழிவுகளை கொட்ட வந்த வாகனத்தை பொதுமக்கள் பொறி வைத்து பிடித்தனர்.

HIGHLIGHTS

மாமிசக் கழிவுகளை கொட்ட வந்த வாகனம் - பொறி வைத்து பிடித்த பொதுமக்கள்
X

கன்னியாகுமரி மாவட்டம் திங்கள் நகர் அருகே, பரம்பை பகுதியில் நூற்றுக்கணக்கான குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளுக்கு இடையே கடந்த சில வாரங்களாக இரவு நேரங்களில் மாமிசக் கழிவுகளை மர்மநபர்கள் கொட்டிச் சென்றனர். இதனால் அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், நேற்று இரவு முதல் விடிய விடிய அப்பகுதிகளில் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில் இன்று அதிகாலையில் டெம்போவில் வந்த மூன்று இளைஞர்கள், மாமிசக் கழிவுகளை அப்பகுதியில் கொட்ட முயற்சித்தனர்.

உடனடியாக அவர்களை சுற்றி வளைத்து சிறைப்பிடித்த ஊர்மக்கள் அவர்களிடம் விசாரித்தபோது, அவர்கள் நெல்லை மாவட்டம் பணக்குடியை சேர்ந்த சார்லஸ், ஐயப்பன், சுரேஷ் என்பது தெரிய வந்தது. இவர்கள் கன்னியாகுமரி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து மாமிசக் கழிவுகளை வாங்கி, பணகுடி பகுதிக்கு கொண்டு சென்று புதைத்து வருவதாகவும் , செல்லும் வழியில் சில கழிவுகளை ஆங்காங்கே கொட்டி சென்றதாகவும் தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து மூவரையும் அப்பகுதி மக்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

Updated On: 21 Feb 2022 5:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு