/* */

கன்னியாகுமரி: பெண் தவறவிட்ட பணப்பை- ஒப்படைத்த நேர்மை இளைஞர்!

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெண் ஒருவர் தவறவிட்ட பணப்பையை இளைஞர் காவல்துறை துறையிடம் ஒப்படைத்து பாராட்டுகளை பெற்றுள்ளார்.

HIGHLIGHTS

கன்னியாகுமரி: பெண் தவறவிட்ட பணப்பை- ஒப்படைத்த நேர்மை இளைஞர்!
X

பெண் தவறவிட்ட பணப்பையை இளைஞர் ஒப்படைத்த காட்சி.

கன்னியாகுமரி மாவட்டம், திக்கணாங்கோடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் வெள்ளியாக்குளம் பகுதிக்கு சென்று கொண்டிருந்தார்.

அப்போது கீழே ஒருபணப்பை கிடந்ததை கண்டார். அதனை எடுத்து கொண்டு குளச்சல் காவல் நிலையம் வந்து போலீசாரிடம் ஒப்படைத்தார்.

அங்கு பணியில் இருந்த குளச்சல் காவல் நிலைய உதவி ஆய்வாளர் சணல்குமார், பணப்பையை பிரித்து பார்த்த போது அதில் ரூ.12,825 இருந்தது.

இதுகுறித்து விசாரணை செய்தபோது, மாத்திரவிளையை சேர்ந்த சுபா என்பவருக்கு சொந்தமானது என்பதை கண்டுபிடித்தார். அந்த பெண்ணை வரவழைத்து. பணப்பையை ஒப்படைத்தனர். பணப்பையை பத்திரமாக எடுத்து ஒப்படைத்த அந்த நேர்மையான இளைஞரை காவல் அதிகாரிகள் உள்பட பொதுமக்கள் பலரும் பாராட்டினார்.

Updated On: 9 Jun 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    கோவிஷீல்டு போட்டவர்களா நீங்கள்..! கவலைய விடுங்க..! டாக்டர் என்ன...
  2. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தை: காய்கறி மற்றும் பழங்கள் விலை நிலவரம்
  3. ஈரோடு
    ஈரோட்டில் தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம்: அரசு மரியாதை
  4. உலகம்
    உலகளவில் கொரோனா தடுப்பூசியைத் திரும்பப் பெறும் அஸ்ட்ராஜெனகா
  5. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்டத்தில் காய்கறி இன்றைய விலை
  6. திருவண்ணாமலை
    பிளஸ் 2 தேர்வில் 92 சதவீதம் தேர்ச்சி , ஆசிரியர்கள் கௌரவிப்பு
  7. திருவண்ணாமலை
    கிரிவலப் பாதை கழிப்பறைகள் பராமரிப்பு, மகளிர் குழுவினருக்கு ஊக்கத்தொகை...
  8. நாமக்கல்
    மோகனூர் வடக்கு துணை அஞ்சலகம் திடீர் இடமாற்றம்: பொதுமக்கள் அதிர்ச்சி
  9. செங்கம்
    சூறைக்காற்றால், திருவண்ணாமலை மாவட்டத்தில் வாழைகள் சேதம்
  10. நாமக்கல்
    பிளஸ் 2 பொதுத்தேர்வில் 100 சதவீத தேர்ச்சி 14 அரசுப் பள்ளிகளுக்கு...