/* */

கன்னியாகுமரி: இரணியல் பேரூராட்சியை கைப்பற்றிய பாஜக

குமரியில் திராவிட கட்சிகளை ஓரம் கட்டி இரணியல் பேரூராட்சியில் பாஜக தனி மெஜாரிட்டியில் வெற்றி பெற்றது.

HIGHLIGHTS

கன்னியாகுமரி: இரணியல் பேரூராட்சியை கைப்பற்றிய பாஜக
X

தமிழகம் முழுவதும் கடந்த 19 ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்றது.

அதன்படி 1 மாநகராட்சி, 4 நகராட்சிகள், 51 பேரூராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் இன்று 8 மையங்கள் மூலமாக வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

இதனிடையே இரணியல் பேரூராட்சியில் வாக்கு எண்ணிக்கை முடிவுற்ற நிலையில் அங்கு மொத்தம் உள்ள 15 வார்டுகளில் 12 வார்டுகளை பாஜக கைப்பற்றியது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பெரும்பாலான பேரூராட்சிகளை திமுக கூட்டணி கைப்பற்றிய நிலையில் இரணியல் பேரூராட்சி மக்கள் மட்டும் திராவிட காட்சிகளை புறக்கணித்து உள்ளனர். இது அரசியல் பார்வையாளர்களை திரும்பி பார்க்கவும் வைத்துள்ளது.

12 வார்டுகளை பாஜக கைப்பற்றி உள்ள நிலையில் 2 சுயேட்சை வெற்றியாளர்களும் பாஜக ஆதரவாளர்களாகவே உள்ளனர். மீதம் உள்ள ஒருவர் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் ஆவார்.

Updated On: 22 Feb 2022 3:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே வலி நிவாரணி எண்ணெய் தயாரிப்பது எப்படி?
  2. லைஃப்ஸ்டைல்
    வெறும் வயிற்றில் கற்றாழை சாறு அருந்துவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி...
  3. ஆன்மீகம்
    பழனியில் வரும் ஆகஸ்ட் மாதத்தில், உலக முருக பக்தர்கள் மாநாடு
  4. லைஃப்ஸ்டைல்
    பெண்களுக்கு 7 மணி நேர தூக்கம் போதுமா..? ஆய்வு என்ன சொல்லுது?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் சாப்பிடுவதால் உடல் பருமனை அதிகரிக்கும் 5 உணவுகள் என்னென்ன...
  6. லைஃப்ஸ்டைல்
    சுவையான வத்தக்குழம்பு செய்வது எப்படி?
  7. லைஃப்ஸ்டைல்
    கோடை காலத்தில் தேனின் மருத்துவ குணங்களை தெரிஞ்சுக்குங்க!
  8. தென்காசி
    10ம் வகுப்பில் அதிக மதிப்பெண் எடுத்த மாணவ,மாணவிகளுக்கு பாராட்டு...
  9. சுற்றுலா
    அண்டார்டிகாவில் ஒழுங்குபடுத்தப்பட்ட சுற்றுலா: சுற்றுச்சூழலை காப்பாற்ற...
  10. லைஃப்ஸ்டைல்
    பதப்படுத்தப்பட்ட உணவுகளை உட்கொள்வது ஆபத்து! ஹார்வர்ட் பல்கலைகழக ஆய்வு