ஆழ்கடலில் சூறைக்காற்று - 11 மீனவர்கள் மீட்பு; ஒருவர் மாயம்

ஆழ்கடலில் சூறைக்காற்று - 11 மீனவர்கள் மீட்பு;  ஒருவர் மாயம்
X
கடலில் சூறைக்காற்றில் தத்தளித்து மீட்கப்பட்ட மீனவர்கள். 
ஆழ்கடலில் சூறைக்காற்றில் சிக்கிய குமரியை சேர்ந்த 11 மீனவர்கள் மீட்கப்பட்ட நிலையில் ஒருவரை காணவில்லை.

குமரி அருகே, ஆழ்கடலில் ஏற்பட்ட சூறைகாற்று மற்றும் ராட்ச அலையில் சிக்கி மீன் பிடிக்க சென்ற விசைப்படகு கடலில் மூழ்கியது. இதில், படகில் இருந்து தூக்கி வீசப்பட்ட கன்னியாகுமரி மாவட்டம் மற்றும் மேற்கு வங்கத்தை சேர்ந்த 12 மீனவர்கள், கடலில் உயிருக்கு போராடிய நிலையில், அந்த வழியாக சக படகுகளில் ஏறி, 11 பேர் உயிர் தப்பினர்.

அதன்படி, உயிர் தப்பிய மீனவர்கள் குளச்சல் மீன்பிடி துறைமுகத்திற்கு இன்று வந்து சேர்ந்தனர். எனினும், குளச்சல் அருகே வானியக்குடி மீனவர் ஜான் மட்டும், கடலில் மாயமான நிலையில் அவரை தேடும் பணி நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் குளச்சல் கடற்கரை கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!