/* */

வாலாஜாபாத் : துணைத் தலைவர் தேர்தல் முறைகேடு வார்டு உறுப்பினர்கள் புகார்

வில்லிவலம் ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் முறைகேடு நடைபெற்றதாக கூறி வார்டு உறுப்பினர்கள் கலெக்டரிடம் புகார் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

வாலாஜாபாத் :  துணைத் தலைவர் தேர்தல்  முறைகேடு வார்டு உறுப்பினர்கள் புகார்
X

 துணை தலைவர் தேர்தல் வெற்றியை முறைகேடாக அறிவித்ததாக புகார் அளித்த வார்டு உறுப்பினர்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட வில்லிவலம் கிராம ஊராட்சி தலைவராக மோகன் என்பவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அக் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களாக 6பேர் தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் ஊராட்சி மன்ற துணைத்தலைவருக்கான தேர்தல் இன்று ஊராட்சி மன்ற அலுவலக கட்டிடத்தில் காலை 10 மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் ஞானசம்பந்தம் முன்னிலையில் தொடங்கியது.

துணைத்தலைவர் பதவிக்கு சீதா கோதண்டன் என்பவர் போட்டியிட்டார்.இவருக்கு ஆதரவாக மூன்று பேரும் மற்றும் தனது வாக்கு என நான்கு வாக்கு ஆதரவாக பதிவாகியுள்ளது. இந்நிலையில் தன்னை துணைத் தலைவராக அறிவிக்காமல் தேர்தல் அலுவலர் முறைகேடாக மற்றொரு நபரை அதிகம் வாக்கு பெற்றதாக கூறி அறிவித்தார்.

இந்த அறிவிப்பு தமிழ்நாடு பஞ்சாயத்து சட்ட விதிகளுக்கு முரணானது இந்திய அரசியலமைப்பு சட்டத்திறகு எதிரானது எனக்கூறி காஞ்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவரது ஆதரவு உறுப்பினர்களுடன் புகார் மனு அளித்தனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் முறையாக விசாரித்து மீண்டும் நேர்மையான முறையில் துணைத்தலைவர் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என கோரிக்கை வைத்தார்.

Updated On: 22 Oct 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பிறந்தநாளை கொண்டாடுவோம் வாங்க..!
  2. நாமக்கல்
    வெளிநாடுகளில் நர்சிங் வேலைக்கு செல்பவர்கள், அந்நிய மொழி பயிற்சி பெற...
  3. நாமக்கல்
    போதமலைக்கு ரூ. 19.57 கோடி மதிப்பில் புதிய சாலை அமைக்கும் பணி :...
  4. லைஃப்ஸ்டைல்
    அற்புதமான உடல் திடத்தைப் பெற இத ஃபாலோ பண்ணுங்க..!
  5. ஆன்மீகம்
    பரசுராம் ஜெயந்தி 2024 - நாள், நேரம், சிறப்புகள் என்னென்ன தெரியுமா?
  6. ஈரோடு
    ஈரோடு நாடாளுமன்றத் தொகுதி வாக்கு எண்ணும் மையத்தில் ஆட்சியர் ஆய்வு
  7. சோழவந்தான்
    சோழவந்தான் அருகே ,தென்கரை உச்சி மாகாளியம்மன் ஆலய விழா..!
  8. வீடியோ
    Vijay-யுடன் ரகசிய சந்திப்பு | வெளிப்படையாக பதில் சொன்ன Seeman |...
  9. லைஃப்ஸ்டைல்
    குழந்தையின் முதல் பிறந்தநாளா.. பெற்றோருக்கு கூறும் வாழ்த்துகள்
  10. காஞ்சிபுரம்
    சிலாம்பாக்கம் தடுப்பணை பணிகள் 50சதவீதம் நிறைவு..!.