/* */

உத்திரமேரூர் அருகே சாமி சிலைகள் உடைப்பு: போலீசார் விசாரணை

அம்மையப்பநல்லூர் கிராமத்திலுள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் ஐயப்பன், நவகிரக சிலைகளை மர்ம நபர்கள் சேதப்படுத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

HIGHLIGHTS

உத்திரமேரூர் அருகே சாமி சிலைகள் உடைப்பு: போலீசார் விசாரணை
X

ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயத்தில் சேதபடுத்தபட்ட ஐயப்பன் மற்றும் நவகிரக சிலைகள். 

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த அம்மையப்பநல்லூர் கிராமத்தில் பழமை வாய்ந்த பிரசித்திபெற்ற ஸ்ரீ செல்வ விநாயகர் ஆலயம் உள்ளது.

இந்த ஆலயத்தின் உட்பகுதியில் ஐயப்பனுக்கு என தனி சன்னதியும், நவக்கிரக சன்னதி மற்றும் சிவன், நந்தி, பார்வதி சிலைகளும் உள்ளது. இந்த கோவிலை கிராம மக்களே பராமரித்து வருகின்றனர்.

கோவிலின் பூசாரி காலை மற்றும் மாலை வேளைகளில் பூஜை செய்வதும், பொதுமக்கள் சுவாமியினை வழிபடுவதும் வழக்கம்.

இந்நிலையில் வழக்கம் போல் நேற்றிரவு கோவிலை பூட்டிவிட்டு வீட்டுக்கு சென்ற பூசாரி இன்று காலை வந்து கோவிலை திறந்தபோது உள்ளே ஐயப்பன் சிலை தலை கை துண்டிக்கப்பட்ட நிலையிலும் நவக்கிரக சிலைகள் நான்கு சிலைகள் உடைக்கப்பட்டும் காணப்பட்டது.

இதைக் கண்ட பூசாரி மற்றும் கிராம மக்கள் உத்திரமேரூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிலையினை உடைத்த மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெறும் பரபரப்பு நிலவி வருகிறது.

Updated On: 11 April 2022 10:15 AM GMT

Related News

Latest News

  1. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  2. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  3. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  4. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!
  5. உசிலம்பட்டி
    மதுரை அருகே திடீரென நடுரோட்டில் தீப்பிடித்து எரிந்த வாகனம்
  6. லைஃப்ஸ்டைல்
    கோடை வெயிலில் மினுமினுக்கும் சரும் வேண்டுமா? கவலையை விடுங்கள்!
  7. வீடியோ
    மீண்டும் வெடித்தது Suriya-வின் சர்ச்சை மும்பையில் என்ன நடக்கிறது ? |...
  8. லைஃப்ஸ்டைல்
    ஈருள்ளம் ஓருள்ளமாகி ; சீரோடு சிறப்புடன் வாழ வாழ்த்துகிறோம்..!
  9. காஞ்சிபுரம்
    காஞ்சிபுரத்தில் கோடைகால விளையாட்டு பயிற்சி முகாம் நிறைவு
  10. ஈரோடு
    சத்தியமங்கலம் பண்ணாரி அம்மன் கல்லூரியில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சி