/* */

சீயமங்கலத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு

வாலாஜாபாத் அடுத்த சீயமங்கலம் பகுதியில் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை வருவாய்த்துறையினர் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்டனர்.

HIGHLIGHTS

சீயமங்கலத்தில் ரூ.10 கோடி மதிப்பிலான ஆக்கிரமிப்பு நிலம் மீட்பு
X

 பாலாற்று கரையோரம் ஆக்கிரமிப்பில் இருந்த அரசு நிலத்தை மீட்கும் வருவாய்துறையினர்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் அரசு நிலங்களை ஆக்கிரமிப்பிலிருந்து மீட்க மாவட்ட ஆட்சியர் உத்தரவின்பேரில், மாவட்ட வருவாய் அலுவலர் இரா.பன்னீர்செல்வம் தலைமையிலான வருவாய்த்துறையினர் பல்வேறு இடங்களில் இருந்து கோடிக்கணக்கான மதிப்பில் நிலங்களை மீட்டு அரசு கணக்கில் கொண்டு வந்துள்ளனர்.

அவ்வகையில் வாலாஜாபாத் அடுத்த சீயமங்கலம் பகுதியில் பாலாற்று கரையோரம் உள்ள அரசு மேய்க்கால் புறம்போக்கு நிலம் 10 ஏக்கர் பரப்பளவில் பல்வேறு நபர்கள் குடிசைகள் வீடுகள் அமைத்து ஆக்கிரமிப்பு செய்திருந்தனர்.

இதுகுறித்து வட்டாட்சியர் லோகநாதன் மாவட்ட வருவாய் அலுவலர் பன்னீர்செல்வத்திற்கு கோப்புகள் அனுப்பியதின் பேரில், இன்று வருவாய்த்துறை குழுவினர் வட்டாட்சியர் தலைமையில் ஜேசிபி இயந்திரங்கள் மற்றும் காவல்துறை உதவியுடன் ஆக்கிரமிப்புகளை அப்புறப்படுத்தி மீட்டு வருகின்றனர்.

ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்ட நிலத்தின் மதிப்பு ரூ.10 கோடி என தெரியவருகிறது.

Updated On: 24 Feb 2022 7:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  2. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  3. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  4. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  5. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  7. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்
  8. லைஃப்ஸ்டைல்
    தாலியில் கருப்பு மணிகள் சேர்த்து அணிவது ஏன் என்று தெரியுமா?
  9. இந்தியா
    பணமோசடி வழக்கில் ஜார்க்கண்ட் அமைச்சர் ஆலம்கீர் ஆலம் கைது
  10. லைஃப்ஸ்டைல்
    என்னுயிரில் வாழ்பவளுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!