/* */

வழிப்பறி, வாகன கடத்தல் : 3 பேர் கைது

உத்தரமேரூரில் வழிப்பறி மற்றும் கடத்தலில் ஈடுபட்ட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

HIGHLIGHTS

வழிப்பறி, வாகன கடத்தல் : 3 பேர்  கைது
X

புதுச்சேரி, தேங்காய்திட்டு பகுதியை சேர்ந்தவர் பாலாஜி. நேற்று முன்தினம் இரவு, டாடா ஏஸ் வாகனத்தில் லாரி டயர்களை மாங்கால் கூட்ரோடு சாலையில் உள்ள டிரான்ஸ்போர்ட் நிறுவனத்தில் இறக்கிவிட்டு நள்ளிரவு நேரத்தில் புதுச்சேரிக்கு திரும்பி சென்றுகொண்டிருந்தார்.

பெருநகர் செய்யாற்று பாலம் அருகே சென்றபோது நின்று கொண்டிருந்த காரில் இருந்த 3பேர் டாடா ஏஸ் வாகனத்தை நிறுத்தி வாகனத்தை ஓட்டி வந்த பாலாஜியை தாக்கியுள்ளனர். அவரிடமிருந்த 200 ரூபாயை பறித்தனர். பின்னர் அவரை வாகனத்தில் இருந்து கீழே தள்ளிவிட்டுவிட்டு டாடா ஏஸ் வாகனத்தை கடத்தினர். அவர்கள் வந்த காருடன் தப்பிச்சென்றனர். இதுகுறித்து பாலாஜி பெருநகர் போலீசில் புகார் செய்தார்.

போலீசார் விசாரணை செய்து, டிரைவரை தாக்கி டாடா ஏஸ் வாகனத்தை கடத்திச் சென்றதாக, பெருநகரை சேர்ந்த ரஞ்சித்குமார் (23), புருஷோத்தமன் (19) கார்த்திக் (21) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். கடத்தப்பட்ட டாடா ஏஸ் வாகனத்தையும், திருடர்கள் பயன்படுத்திய காரையும் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Updated On: 12 March 2021 1:51 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    பெண்மை சக்தியைப் போற்றும் உலக மகளிர் தின வாழ்த்துக்கள்
  2. லைஃப்ஸ்டைல்
    பெண்மையை போற்றுவோம்..! வல்லமை வளரும்..!
  3. ஆன்மீகம்
    விநாயகனே... வினை தீர்ப்பவனே! - இனிய விநாயகர் சதுர்த்தி வாழ்த்துகளை...
  4. சினிமா
    Indian 2 டிரைலர் எப்ப ரிலீஸ் தெரியுமா?
  5. சிங்காநல்லூர்
    போலி ஆவணங்கள் மூலம் நிலத்தை அடமானம் வைத்து மோசடி செய்ததாக புகார்
  6. லைஃப்ஸ்டைல்
    பிறப்பை கொண்டாடுவோம் வாங்க..! பிறந்தநாள் வாழ்த்து சொல்வோமா..?
  7. வீடியோ
    🔴LIVE : சத்யராஜ் மீண்டும் சர்ச்சை பேச்சு | WEAPON Movie Press Meet...
  8. கோவை மாநகர்
    கோவை ஆட்சியர் அலுவலகத்தில் மேற்கூரை சரிந்து விபத்து ; டூவிலர்கள்
  9. கோவை மாநகர்
    இந்து மதம், இந்தி மொழி, இந்தி பேசும் மக்களுக்கு எதிரான கட்சி திமுக :...
  10. ஈரோடு
    பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து 1,192 கன அடியாக அதிகரிப்பு