/* */

ஆடி மாதத்தை முன்னிட்டு எல்லையம்மன் ஆலயத்தில் சிறப்பு அலங்காரத்துடன் பூஜை

ஆர்பாக்கம் கிராமத்தில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஶ்ரீ எல்லையம்மனுக்கு சிறப்பு அலங்காரத்துடன் அபிஷேகம் நடந்தது

HIGHLIGHTS

ஆடி மாதத்தை முன்னிட்டு எல்லையம்மன் ஆலயத்தில் சிறப்பு  அலங்காரத்துடன் பூஜை
X

ஆர்ப்பாக்கம் ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் ஆடி மாதத்தினையொட்டி சிறப்பு மலர் அலங்காரத்தில் எழுந்தருளிய அம்மன்.

காஞ்சிபுரம் மாவட்டம் , வாலாஜாபாத் வட்டம் , ஆர்பாக்கம் கிராமத்தில் அமைந்துள்ள ஸ்ரீ எல்லையம்மன்‌ ஆலயத்தில் ஆடி மாதத்தை ஒட்டி முதல் நாளிலிருந்து நாள்தோறும் சிறப்பு அபிஷேக அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்து வந்தார்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருள கோயில் வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்ட தீமிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது.நேற்று ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை ஒட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது தொடர்ந்து இன்றும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகப் பொருட்களால் அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு மலர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

இந்நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடனை வேண்டி அங்கப்பிரவேசம் மேற்கொண்டும், மாவிளக்கு பூஜை செய்தும் அம்மன் அருள் பெற்றனர்.விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்பட்டது


Updated On: 13 Aug 2022 2:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு