/* */

அதிமுக வேட்பாளர்களிடையே போட்டி: இரட்டை இலை சின்னம் "அம்பேல் "

வாலாஜாபாத் பேரூராட்சியில் அதிமுக வேட்பாளர்களில் ஒருவர் வாபஸ் பெறாததால் இரட்டை இலை சின்னம் கிடைக்காமல் சுயச்சை சின்னம் கிடைத்தது

HIGHLIGHTS

அதிமுக வேட்பாளர்களிடையே போட்டி: இரட்டை இலை சின்னம் அம்பேல்
X

வாலாஜாபாத் பேரூராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்கள் 

காஞ்சிபுரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்குப்பதிவு பிப்ரவரி 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இந்நிலையில் வாலாஜாபாத் பேரூராட்சியில் 15 வார்டுகள் அடங்கியுள்ளது. இதில் 54 வேட்புமனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இறுதி செய்யப்பட்டது.

இன்று வாபஸ் பெற்ற நிலையில் கட்சிகளுக்கான ஒதுக்கீடு நடைபெற்றபோது அதிமுகவை சேர்ந்த பாலமுருகன் மற்றும் மாபுப்பாஷா ஆகிய இருவரும் தாக்கல் செய்திருந்த நிலையில் இருவரும் வாபஸ் பெற மறுத்ததால் இருவருக்கும் தேர்தல் ஆணைய விதிகள்படி சின்னங்கள் ஒதுக்கப்பட்டு நோட்டீஸ் ஒட்டப்பட்டது.

போட்டி காரணமாக இருவரும் முரண்டு பிடித்ததால் வாலாஜாபாத் 15வது வார்டில் அங்கீகரிக்கப்பட்ட சின்னமாக உதயசூரியன் மட்டுமே போட்டியிடுகிறது. போட்டி காரணமாக 15 வார்டில் இரட்டை இலை சின்னம் அம்பேலானது.

Updated On: 7 Feb 2022 1:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க