/* */

காஞ்சிபுரம் : தொடர் மழை காரணமாக கிராம நீர்நிலைகள் நிரம்பியதால் பறவைகள் தஞ்சம்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த ஒரு வாரமாக பெய்த கன மழையால் கிராம ஏரி நீர் நிலைகள் நிரம்பி வழிவதால் பறவைகள் கூட்டம் ஏரிகளில் தஞ்சம் அடைந்துள்ளது.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : தொடர் மழை காரணமாக கிராம நீர்நிலைகள் நிரம்பியதால் பறவைகள்  தஞ்சம்
X

காஞ்சிபுரம் அடுத்த மேல்பேரமநல்லூர் ஏரியில் தஞ்சம் கொண்டுள்ள பறவைகள் கூட்டம்.

தமிழகத்தில் ஏற்பட்ட வானிலை மாற்றம் காரணமாக கடந்த செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம் வாலாஜாபாத் உத்திரமேரூர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது.

இந்த கனமழை காரணமாக கிராமங்களில் உள்ள சிறிய ஏரிகள் நிரம்பி வழிகிறது. தற்போது அறுவடை முடித்து மீண்டும் பயிர் பருவம் துவங்கியுள்ளதால் நிலங்களில் விவசாயிகள் ஏர் உழுது தயார் நிலையில் வைத்துள்ளனர்.

பறவைகள் நிலங்களில் உள்ள மண்புழு நெல்மணிகள் உள்ளிட்டவைகளை உணவு உட்கொள்ள வரும் நிலையில் ஏரிகளில் உள்ள அடர்ந்த மரங்கள் உள்ளதால் மாலை நேரங்களில் அதிகளவு பறவைகள் தஞ்சம் அடைகிறது.

இவைகள் எழுப்பும் ஒலி கிராம மக்களுக்கு இனிமையாகவும் அதேநேரம் தங்கள் கிராமம் மற்றொரு வேடந்தாங்கலாக மாறியதும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்துள்ளனர்.

அதிகாலையில் இரை தேட கிளம்ப பறவைகள் எழுப்பும் ஓசை தாங்களும் அதிகாலையில் எழுந்து விவசாய வேலைகளைப் பார்க்க இது பெரிதும் உதவுகிறது எனவும் தெரிவித்தனர்.

Updated On: 10 Oct 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    ஆசையுடன் அப்பாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  2. வீடியோ
    Bhagyaraj மருமகளுடன் குத்தாட்டம் போட்ட Gayathri Raghuram ! #dance...
  3. லைஃப்ஸ்டைல்
    ரமலான் வாழ்த்துச் சொல்வோம் வாங்க..!
  4. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  5. லைஃப்ஸ்டைல்
    நண்பனின் பிறந்தநாளில் வேடிக்கையா கலாய்க்கலாம் வாங்க
  6. லைஃப்ஸ்டைல்
    வேடிக்கையான பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
  7. வீடியோ
    பெண் வேடத்தில் வந்த Cool Suresh ! அரண்டுபோன K Raja !#coolsuresh...
  8. இந்தியா
    ஒருபோதும் இந்து அல்லது முஸ்லீம் என்று சொல்லவில்லை: பிரதமர் மோடி
  9. லைஃப்ஸ்டைல்
    சாப்பாட்டுக்கு முன்னும் பின்னும் டீ, காபியை தவிர்க்க வேண்டுமாம்....
  10. இந்தியா
    NewsClick நிறுவனரை கைது செய்தது செல்லாது, உடனடியாக விடுதலை செய்ய...