/* */

காஞ்சிபுரத்தில் தடுப்பூசி போட்டவர்களுக்குத் தென்னங்கன்று, பரிசுகள்

காவாந்தண்டலம் கிராமத்தில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு தென்னங்கன்று மற்றும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டது.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் தடுப்பூசி போட்டவர்களுக்குத் தென்னங்கன்று, பரிசுகள்
X

தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களுக்கு மரக்கன்று மற்றும் பரிசு பொருட்கள் வழங்கபட்டது.

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மத்திய, மாநில அரசுகளின் அறிவுறுத்தலின்படி அரசு மருத்துவமனைகளில் நாள்தோறும் தடுப்பூசி பொதுமக்களுக்கு செலுத்தப்பட்டு வருகிறது.

இதுமட்டுமில்லாமல் ஞாயிற்றுக்கிழமைகளில் சிறப்பு தடுப்பூசி முகாம் தமிழகத்தில் கடந்த 3 மாதமாக நடைபெற்று வருகிறது. இதில் அரசு ஊழியர்கள் தனியார் தொழிற்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் ஓய்வு நாளான ஞாயிற்றுக் கிழமைகளில் தடுப்பூசி செலுத்திக்கொண்டு ஓய்வெடுக்கும் வகையில் இம்முகாம் ஏற்படுத்தப்பட்டது. மேலும் அரசு மருத்துவமனையில் 24 மணி நேரமும் தடுப்பூசி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமைகளுக்கு பதிலாக சனிக்கிழமைகளில் சிறப்பு முகாம்கள் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டது. அவ்வகையில் இன்று காஞ்சிபுரம் மாவட்டத்தில் 530 சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.

காஞ்சிபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட காவாந்தண்டலம் கிராம ஊராட்சி சார்பில் அரசு நடுநிலைப் பள்ளியில் சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்களுக்கு கிராம ஊராட்சி மன்ற தலைவர் ராதா விஜியக்குமார் பரிசாக தென்னை மரக்கன்றுகளும் பரிசுப்பொருட்களும் வழங்கி பொதுமக்களை ஊக்கப்படுத்தினார்.

காவந்தண்டலம் கிராம ஊராட்சியில் இதுவரை 70 சதவீதம் பேர் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் திமுக கிளைக் கழக செயலாளர் ஓம்சக்திவரதன், துணைத்தலைவர் சரஸ்வதிசீனுவாசன் மற்றும் ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் சங்கர், தவமணி மூர்த்தி,ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Updated On: 23 Oct 2021 8:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்