/* */

தசைப்பிடிப்பு காரணமாக கிணற்றில் சிக்கியவரை, தீயணைப்பு துறையினர் மீட்பு

உத்திரமேரூர் அருகே கிணற்றில் இறங்கி குளித்து கொண்டிருந்த போது தசை பிடிப்பு காரணமாக கிணற்றில் சிக்கிய 45 வயதுடைய நபரை தீயணைப்பு வீரர்கள் கிணற்றில் இருந்து பத்திரமாக மீட்டனர்.

HIGHLIGHTS

தசைப்பிடிப்பு  காரணமாக கிணற்றில் சிக்கியவரை, தீயணைப்பு துறையினர் மீட்பு
X

கிணற்றில் குளிக்கும் போது திடீரென ஏற்பட்ட தசைப்பிடிப்பின் காரணமாக வெளியே வரமுடியாமல் தவித்த நபரை தீயணைப்பு வீரர்கள் மீட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சாலவாக்கம் அடுத்த கிளாக்காடி கிராமத்தில் வசித்து வருபவர் நடராஜன் மகன் சசிகுமார் வயது 45.

இவர் அருகில் உள்ள விவசாய கிணற்றில் குளிப்பதற்காக சென்றுள்ளார்.குளிக்கும் போது அவருக்கு கால் தசை பிடிப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கிணற்றிலிருந்து ஏற முடியாமல் அவதிப்பட்டு கூச்சலிட்டு உள்ளார்.இவரின் குரலை கேட்டு கிராம மக்கள் கிணற்றருகே வந்து பார்த்த போது இவர் கிணற்றில் இருந்து வெளியே வரமுடியாமல் அவதிப்பட்டு வருவது தெரிய வந்தது.

கிராம மக்கள் அவரை கிணற்றிலிருந்து வெளியே எடுக்க முயற்சி செய்தும் உடல் பருமன் காரணமாக பலன் அளிக்காததால் உத்திரமேரூர் தீயணைப்பு மீட்பு பணி நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

இதையடுத்து தீயணைப்பு நிலைய நிலைய அலுவலர் ஏழுமலை தலைமையிலான தீயணைப்பு மீட்புப் பணி நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிணற்றில் ஏற முடியாமல் அவதிப்பட்டு வந்த சசிகுமாரை கிராம மக்கள் உதவியுடன் உயிருடன் மீட்டனர்.

Updated On: 4 July 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  2. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  3. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  6. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...
  7. லைஃப்ஸ்டைல்
    கவலையை விரட்ட நீங்க ரெடியா?
  8. கோவை மாநகர்
    பாரதியார் பல்கலை., பகுதியில் நாய்கள் தாக்கி 3 மான்கள் உயிரிழப்பு
  9. கோவை மாநகர்
    கோவை ரயில் நிலையம் முன் குளம் போல் தேங்கிய சாக்கடை நீர் ; பயணிகள்
  10. கோவை மாநகர்
    கோவையில் போதை மாத்திரைகளை விற்பனை செய்த கும்பல் கைது