/* */

உத்திரமேரூர் : ஏரி நிரம்பி கலங்கல் வழியே நீர் வெளியேறி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான உத்திரமேரூர் ஏரி தற்போது நிரம்பி கலங்கல் வழியே நீர் வெளியேறி வருவதால் 18 கிராம விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

HIGHLIGHTS

உத்திரமேரூர் : ஏரி நிரம்பி கலங்கல் வழியே நீர் வெளியேறி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி
X

உத்திரமேரூர் ஏரி நிரம்பி வழியும் காட்சி

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இரண்டாவது மிகப்பெரிய ஏரியான உத்திரமேரூரில் 18 மதகுகளுடன் , 5500 ஏக்கர் ஏக்கர் பாசன பரப்பளவும், 958 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்டது.

இந்த ஏரியை நம்பி 18 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் விவசாயம் மேற்கொண்டு வரும் நிலையில் 20 அடி முழுமையாக தற்போது நிரம்பி உபரிநீர் மாலை முதல் கலங்கள் வழியாக வெளியேறி வருகிறது.

கடந்த வாரம் பெருநகர் செய்யாற்றில் வந்த நீரை அனுமந்தண்டலம் பகுதியில் பொதுப்பணித்துறையினர் நீரைத் திருப்பி உத்திரமேரூர் ஏரிக்கு செல்லும் வகையில் வழி வகை செய்தனர்.

இதனால் உத்திரமேரூர் ஏரி மெல்ல மெல்ல நிரம்பத் துவங்கி இன்று காலை முதலில் மழை பெய்து வருவதால் விரைவாக நிறைவு பெற்று உபரிநீர் தற்போது வெளியேறுகிறது. உத்திரமேரூர் ஏரி நிரம்பி வழிவதால் 18 கிராம விவசாயிகள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Updated On: 29 Oct 2021 12:45 PM GMT

Related News

Latest News

  1. தமிழ்நாடு
    தமிழகத்தில் தேனி, விருதுநகர், தென்காசி மாவட்டங்களுக்கு கனமழை...
  2. இந்தியா
    தொலை தொடர்புத் துறை பெயரில் போலி அழைப்புகள்: மத்திய அரசு எச்சரிக்கை
  3. லைஃப்ஸ்டைல்
    அன்னைக்கு இன்னைக்கு பிறந்தநாள்..! வாழ்த்துகிறோம்..!
  4. லைஃப்ஸ்டைல்
    வார்த்தைகளால் பூ தொடுத்து அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்து..!
  5. இந்தியா
    உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த நான்கு மாத குழந்தை!
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி கோர்ட்டில் ஆஜர்: சவுக்கு சங்கர் லால்குடி கிளை சிறையில்...
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டில் இருந்தபடியே பெண்கள் சம்பாதிப்பது எப்படி?
  8. ஆன்மீகம்
    நடப்பாண்டில் வைகாசி விசாகம் எப்போது வருகிறது தெரியுமா?
  9. லைஃப்ஸ்டைல்
    ருசியான எண்ணெய் கத்திரிக்காய் கிரேவி செய்வது எப்படி?
  10. கல்வி
    எமிஸ் தளத்தில் பொது மாறுதல் கேட்டு விண்ணப்பித்த 13,484 ஆசிரியர்கள்