/* */

மனு வாங்கி ஏமாற்றும் அரசு அல்ல, நிறைவேற்றும் அரசு திமுக : தா.மோ.அன்பரசன்

வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை அமைச்சர் தா.மோ.அன்பரசன் பெற்றார்.

HIGHLIGHTS

மனு வாங்கி  ஏமாற்றும் அரசு அல்ல, நிறைவேற்றும் அரசு திமுக : தா.மோ.அன்பரசன்
X

வாலாஜாபாத் யூனியனில் பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை அமைச்சர் தா.மோ. அன்பரன் பெற்றார்.

காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றியப் பகுதி மக்களிடம் உங்கள் தொகுதியில் முதல்வர் திட்டத்தின் கீழ் கோரிக்கை மனுக்களை இன்று வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் தமிழக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் க.சுந்தர் , சி.வி.எம்.பி எழிலரசன் ஆகியோர் பெற்று கொண்டார்.

முன்னதாக சுமார் 700க்கும் மேற்பட்டோர் தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி மனுக்கள் பதிவு செய்து வரிசையில் நின்று அமைச்சரிடம் வழங்கினர்.

இவ்விழாவில் பேசிய அமைச்சர், உங்கள் தொகுதியில் முதல்வர் எனும் திட்டத்தின் கீழ் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு பெறப்பட்ட மனுக்களுக்கு விரைவாக தீர்வு காணப்பட்டது . அதன் அடிப்படையில் தற்போது அரசின் மீது நம்பிக்கை கொண்டுள்ள பொதுமக்கள் மனுக்களை கொடுக்க வந்துள்ளனர்.

அவர்களின் எண்ணப்படியே பொது மக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களுக்கு உரிய அத்தாட்சி படிவம் தரப்பட்டுள்ளது. மற்றவர்களைப்போல் மனுக்களை பெற்றுக் கொண்டு ஏமாற்றுகின்ற அரசு திமுக அரசு அல்ல எனவும் விரைவில் மக்களுக்கான தீர்வு இதே பகுதியில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இவ்விழாவில் மாவட்ட ஆட்சியர் மா.ஆர்த்தி , மாவட்ட வருவாய் அலுவலர் இரா. பன்னீர்செல்வம், வாலாஜாபாத் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆர்கே தேவேந்திரன், துணைத் தலைவர் பி சேகர், மாவட்ட பிரதிநிதி சுகுமார் மற்றும் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Updated On: 22 Dec 2021 2:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அம்மாவுக்கு சொல்லுங்க.. அவங்க ரொம்ப சந்தோஷப்படுவாங்க
  2. லைஃப்ஸ்டைல்
    கோவக்காய் சாப்பிட்டு இருக்கீங்களா? எடை குறைக்குமாம்..!
  3. லைஃப்ஸ்டைல்
    காலைப் பொழுதில் ஒரு புன்னகையுடன்: உங்கள் நாளை அழகாக்கும் ரகசியங்கள்
  4. கல்வி
    கொஞ்சம் கொஞ்சமாக காணாமல் போகும் கர்சிவ் ரைட்டிங் எனும் கையெழுத்துக்...
  5. உலகம்
    ஆறுமாத குழந்தை மீது பலமுறை துப்பாக்கிச்சூடு..! தந்தை கைது..!
  6. திருவள்ளூர்
    பழுதடைந்த குடிநீர் தொட்டியை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை!
  7. உலகம்
    கடந்த ஆண்டில் வெளுத்துவிட்ட உலகின் 60% க்கும் மேற்பட்ட பவளப்பாறைகள்
  8. அரசியல்
    சீனாவை எதிர்க்க இந்தியாவுக்கு தைரியம் இருக்கா? படீங்க உங்களுக்கே...
  9. சேலம்
    மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1,120 கன அடியாக அதிகரிப்பு
  10. மேட்டுப்பாளையம்
    கனமழை காரணமாக மண் சரிவு : மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் ரத்து..!