/* */

உத்திரமேரூர் : குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்க கோரிக்கை

கிராமத்தில் கட்டப்பட்டுள்ள சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை மக்கள் பயன்பாட்டிற்கு அளிக்க கிராம மக்கள் கோரிக்கை

HIGHLIGHTS

உத்திரமேரூர் :  குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை திறக்க கோரிக்கை
X

களக்காட்டூர் ஊராட்சியில் அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வராத குடிநீர் நிலையம்

காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்டது களக்காட்டூர் கிராமம். இங்கு இரண்டாயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு பாலாற்று குடிநீர் திட்டத்தின் மூலம் வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.

மேலும் தூய்மையான சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்கும் நோக்கில் 2018-2019 மாநில நிதி குழு ஆணைய நிதியிலிருந்து ₹8.96 லட்ச மதிப்பிடில் காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி துறை சார்பில் எதிர் சவ்வூடு பரவல் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க திட்டமிட்டு பணிகள் இந்தாண்டு ஆரம்பத்தில் துவங்கி பணிகள் நிறைவுற்றது.

அருகிலிருந்த திருக்கோயிலிருந்து மின்சாரம் எடுத்து சோதனை ஓட்டம் நடைபெற்றது. அதன் பணிகள் கிடப்பில் போடப்பட்டது. மின் இணைப்பு கொடுக்கப்படமால் பூட்டியே பல மாதங்களாக கிடக்கிறது.

உள்ளாட்சி நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், கிராம் மக்களுக்கு சுகாதாரமான குடிநீர் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 20 Aug 2021 6:15 AM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    மத்தியபிரதேச மாநிலத்தில் தீப்பிடித்து எரிந்த வாக்குப்பதிவு...
  2. அரசியல்
    தமிழர்களை நிறத்தின் அடிப்படையில் பேசுவதா? காங்கிரசுக்கு பிரதமர் மோடி...
  3. சினிமா
    அச்சச்சோ அச்சச்சோ அச்சச்சோ பாடல் வரிகள்!
  4. லைஃப்ஸ்டைல்
    கவிதைக்கு பொய் அழகா..? அழகுக்கு கவிதை மெய்யா..?
  5. கவுண்டம்பாளையம்
    ரத்தினபுரியில் இருசக்கர வாகனம் திருட்டு ; போலீசார் விசாரணை..!
  6. கோவை மாநகர்
    டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி மாநகர காவல் ஆணையரிடம் மனு
  7. பொள்ளாச்சி
    பொள்ளாச்சி அருகே சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு..!
  8. லைஃப்ஸ்டைல்
    விழுவதும் எழுவதும் குழந்தை பருவத்தே கற்ற பாடம்..!
  9. ஈரோடு
    ஈரோடு மாவட்டத்தில் குடிநீர் விநியோக ஆய்வுக் கூட்டம்..!
  10. லைஃப்ஸ்டைல்
    உயிரோடு கலந்த உறவு மனைவி..! உயிரும் மெய்யும் கலந்த உறவு..!