/* */

காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் ரேசன் கடைகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு

வாலாஜாபாத் வட்டத்தில் பல்வேறு நியாயவிலை கடைகளில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அடுத்த வாலாஜாபாத் ரேசன் கடைகளில் ஆட்சியர் திடீர் ஆய்வு
X

திம்மராஜன்பேட்டை நியாயவிலை கடையில் விற்பனை பதிவேற்றத்தை ஆட்சியர் மா.ஆர்த்தி ஆய்வு மேற்கண்டார்.

காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் வட்டத்திற்கு உட்பட்ட ஏகனாம்பேட்டை நியாய விலைக் கடையில் மாவட்ட ஆட்சித்தலைவர் மா.ஆர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

நியாய விலைக் கடையில் விநியோகிக்கப்படும் அரிசி, சர்க்கரை, பருப்பு, எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களின் இருப்பு விவரங்களை பார்வையிட்டு அவற்றின் தரங்கள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது நியாய விலைக் கடை ஊழியர்களிடம் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்படும் பொருட்களை தரமானதாகவும், சரியான அளவிலும் விநியோகிக்க வேண்டும் என்று ஊழியர்களுக்கு அறிவுறுத்தினார்.

மேலும், நியாய விலைக்கடைக்கு வந்திருந்த பொது மக்களிடம் விநியோகிக்கப்படும் பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பது குறித்தும் கேட்டறிந்தார். இந்த ஆய்வின் போது வட்ட வழங்கல் அலுவலர் திரு.கார்த்திக் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Updated On: 1 March 2022 11:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  3. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  4. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  5. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  6. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  7. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க
  8. கோவை மாநகர்
    கோவை மாநகரில் ஒரு மணி நேரம் கனமழை ; மக்கள் மகிழ்ச்சி
  9. நாமக்கல்
    வெண்ணந்தூரில் தனி செயலாளரின் தந்தையின் படத்திற்கு முதல்வர் மாலை...
  10. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சி மாவட்ட தனியார் பள்ளி வாகனங்களில் மாவட்ட ஆட்சியர் ஆய்வு