/* */

மாற்று கட்சியினர் 100 பேர், எம்எல்ஏ சுந்தர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்

அஞ்சூர் பகுதியில் மாற்று கட்சியிலிருந்து விலகி 100 பேர், மாவட்ட செயலாளரும், எம்எல்ஏவுமான சுந்தர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்.

HIGHLIGHTS

மாற்று கட்சியினர் 100 பேர், எம்எல்ஏ சுந்தர் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர்
X

 மாற்று கட்சியிலிருந்து விலகி திமுகவில் இணைந்தபோது எம்எல்ஏ சுந்தருக்கு மலர்மாலை அணிவித்தனர்.

தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று 100 நாட்கள் ஆகியுள்ள நிலையில் சிறப்பான திட்டங்கள் குறைந்த காலத்தில் நடைமுறை கொண்டு வரப்பட்டதும் , புதிய அறிவிப்புகள் பொதுமக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது..

இந்நிலையில் பல்வேறு கட்சிகளிலிருந்து மூத்த உறுப்பினர்களிலிருந்து கடைசி தொண்டன் வரை பல்வேறு நபர்கள் நாள்தோறும் தமிழகம் முழுவதும் திமுகவில் இணைந்து வருகின்றனர்.

அவ்வகையில் காஞ்சிபுரம் பெருநகராட்சி 42 ஆவது வட்டம் அஞ்சூர் பகுதியில் காண்டீபன் என்பவர் தலைமையில் பல்வேறு கட்சியிலிருந்து விலகி நூற்றுக்கும் மேற்பட்ட ஆண் பெண்கள் திமுகவில் மாவட்ட செயலாளரும் உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினருமான க.சுந்தர் முன்னிலையில் இணைந்தனர்.

இணைந்த உறுப்பினர்களை வரவேற்று சேலை, வேட்டிகள் வழங்கி வரவேற்று வரும் உள்ளாட்சி தேர்தலில் திமுக வெற்றிக்கு பாடுபட வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

இவ்விழாவில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் , நகரசெயலாளர்‌ சன்பிராண்ட் ஆறுமுகம் , சந்துரு ஒன்றிய செயலாளர் குமார் , தேனம்பாக்கம் சங்கர் , மலர்மன்னன் உள்ளிட்ட திமுகவினர் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Updated On: 22 Aug 2021 7:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    நீ எங்கே என் அன்பே, நீயின்றி நான் எங்கே? - மனைவியை காணவில்லை...
  2. லைஃப்ஸ்டைல்
    பூமி கணவன் வாடுவது கண்டு வான் மனைவி விடும் கண்ணீர், மழை..!
  3. லைஃப்ஸ்டைல்
    மீந்து போன இட்லிகளை பயன்படுத்தி ருசியான மசாலா இட்லி செய்வது எப்படி?
  4. நாமக்கல்
    செல்லப்பம்பட்டி மாரியம்மன் கோயில் சித்திரைத் திருவிழா துவக்கம்
  5. தமிழ்நாடு
    தமிழ்நாட்டில் தொடர்ந்து உயரும் அரிசி விலை! காரணம் என்ன?
  6. அரசியல்
    நடிகர் பிரகாஷ்ராஜுக்கு ‘அம்பேத்கர் சுடர்’ விருது: விடுதலை சிறுத்தைகள்...
  7. ஈரோடு
    ஈரோடு தொகுதி ஸ்ட்ராங் ரூம் சிசிடிவி கேமரா பழுது: ஆட்சியர் விளக்கம்
  8. தமிழ்நாடு
    பேராசிரியை நிர்மலா தேவி குற்றவாளி; இருவர் நிரபராதி! நீதிமன்றம்...
  9. நாமக்கல்
    டாஸ்மாக் ஊழியர்களை அரிவாளால் வெட்டிய மர்ம நபர்களைப் பிடிக்க 6...
  10. திருப்பத்தூர், சிவகங்கை
    சிவகங்கையில் நீதிமன்ற கூடுதல் கட்டிடம் திறப்பு விழா