/* */

மூதாட்டி கழுத்தை நெறித்து 5சவரன் நகை பறிப்பு

மூதாட்டி கழுத்தை நெறித்து 5சவரன் நகை பறிப்பு
X

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அருகே மூதாட்டியின் 5 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தை அடுத்த தோண்டங்குளம் கிராமம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சீனிவாசன் .இவரது மனைவி பேபிஅம்மாள்(80). இவருக்கு 5 பெண்கள், 1 மகன் ஆகியோர் உள்ளனர்.இந்நிலையில் பேபியம்மாள் வீட்டில் வழக்கம் போல் அனைவரும் சாப்பிட்டு விட்டு தூங்க சென்று உள்ளனர். இன்று நள்ளிரவு 2 மணி அளவில் இவர்கள் வீட்டில் அத்துமீறி மர்ம நபர்கள் 2 பேர் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து வீட்டின் உள்ளே புகுந்துள்ளனர்.

வீட்டில் அனைவரும் அசந்து தூங்கிய நிலையில் பேபிஅம்மாள் படுத்திருந்த அறைக்கு சென்ற மர்ம நபர்கள் அவரது கழுத்தை இறுக்கி பிடித்து கொண்டு அவர் அணிந்திருந்த சுமார் 5 சவரன் தங்க சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்று உள்ளனர்.இதுகுறித்து தகவலறிந்த சாலவாக்கம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டு 5 சவரன் தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Updated On: 17 Feb 2021 10:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அருமையான தோழமைக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து
  2. திருச்சிராப்பள்ளி மாநகர்
    திருச்சியில் தினமும் பெய்யும் மழையால் மாயமானது அக்னி நட்சத்திர வெயில்
  3. கல்வி
    தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையத்தில் பட்ட மற்றும் பட்டய படிப்புகள்
  4. லைஃப்ஸ்டைல்
    ஆரோக்கியத்தில் மந்திரி மாதிரி வாழணுமா? அடிக்கடி முந்திரி
  5. லைஃப்ஸ்டைல்
    தனக்கென வாழாமல் நமக்கென வாழும் தந்தைக்கு பிறந்தநாள் வாழ்த்து
  6. தமிழ்நாடு
    மணிக்கு 200 கி. மீ.வேகம்: பறக்கும் டாக்சி தயாரிக்கும் முயற்சியில்...
  7. லைஃப்ஸ்டைல்
    ருசியான சில்லி பரோட்டா செய்வது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    குழம்பு மிளகாய் பொடி வீட்டிலேயே தயார் செய்வது எப்படி?
  9. திருச்சிராப்பள்ளி மாநகர்
    கை நழுவி போகிறதா? திருச்சி பஞ்சப்பூரில் அமைய உள்ள ஒலிம்பிக் அகாடமி
  10. ஆன்மீகம்
    தியாகத் திருநாளாம் பக்ரீத் வாழ்த்து சொல்லலாம் வாங்க