/* */

விஷபூச்சி நோயை கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை

விஷபூச்சி நோயை கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை
X

காஞ்சிபுரம் மாவட்டத்தில் தர்பூசணியை தாக்கும் விஷபூச்சி நோயை கட்டுப்படுத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் , உத்திரமேரூரை அடுத்த ஆதவப்பாக்கம் கிராமத்தில் 50 ஏக்கர் பரப்பளவில் விவசாயிகள் தர்பூசணி பயிரிட்டுள்ளனர்.இங்கு பயிரிட்டுள்ள விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் ஆண்டுதோறும் மொத்தமாக தர்பூசணியை வாங்கி செல்வதால் தர்பூசணி பயிரிட்ட விவசாயிகள் போதிய வருமானம் ஈட்டி வந்தனர்.இந்நிலையில் தர்பூசணி செடியின் வேரில் கடந்த இரு வாரங்களாக பூச்சி நோய் தாக்குதல் காரணமாக காய் வரும் நிலையில் செடிகள் அழுகி வீணாவதும், மேலும் செடிகள் நன்றாக வளர்ந்து இருந்தும் செடிகளில் காய்கள் காய்க்கவில்லை என விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

பல ஏக்கரில் தர்பூசணி பயிரிட்ட விவசாயிகள் லட்சக்கணக்கில் முதலீடு செய்த வருமானம் கூட கிடைக்காமல் வேதனை அடைந்துள்ளனர். இதனால் தர்பூசணி பயிரிட்டுள்ள விவசாயிகளின் நிலங்களில் வேளாண்மைதுறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு பூச்சி நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்த விவசாயிகளுக்கு ஆலோசனை வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

Updated On: 15 Feb 2021 4:15 AM GMT

Related News

Latest News

  1. உலகம்
    உலகின் கடைசி நகரம் எது தெரியுமா?
  2. திருப்பரங்குன்றம்
    செல்போன் முன்பதிவு இல்லாத பயண சீட்டுகள் விற்பனை இரு மடங்காக
  3. லைஃப்ஸ்டைல்
    பொண்ணு மாப்பிள்ளையை வாழ்த்துவோம் வாங்க..!
  4. வீடியோ
    நெல்லையை உலுக்கிய பயங்கர சம்பவம் | காதலி முன்னே கொடூரம் | Tirunelveli...
  5. திருச்சிராப்பள்ளி மாநகர்
    முன்னாள் படைவீரர்களுக்கு திருச்சி மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு
  6. திருப்பரங்குன்றம்
    மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் பலத்த மழை: கொடைக்கானலில், படகு போட்டி...
  7. லைஃப்ஸ்டைல்
    'ஓருயிராய் வாழ்வோம் வா'..என அழைக்கும் திருமண வாழ்த்து..!
  8. ஆன்மீகம்
    வரும் வியாழன் அன்று வைகாசி விசாகம்; தமிழ் கடவுள் முருகனை வழிபடுங்க..!
  9. உலகம்
    சீனாவில் பள்ளிக்குள் புகுந்து குழந்தைகளை கத்தியால் குத்திய பெண்
  10. லைஃப்ஸ்டைல்
    உங்கள் பெயரின் முதல் எழுத்து ‘எஸ்’ என ஆரம்பிக்கிறதா? - ரொம்ப...