/* */

கணவனை கொலை செய்து 13நாட்களுக்கு பிறகு காவல் நிலையத்தில் மகனுடன் மனைவி‌ சரண்.

சோமமங்கலம் அருகே கள்ளக்காதலுக்காக கணவனைக் கொன்று ஏரியில் வீசிவிட்டு 13 நாட்கள் தலைமறைவாக இருந்த மனைவி காவல் நிலையத்தில் சரண்

HIGHLIGHTS

கணவனை கொலை செய்து   13நாட்களுக்கு பிறகு காவல் நிலையத்தில் மகனுடன் மனைவி‌ சரண்.
X

காஞ்சிபுரம் மாவட்டம் சோமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஆதனஞ்சேரி, திருமகள் நகர் பகுதியில் 7ஆண்டுகளாக வசித்து வருபவர் தங்கவேல். இவருக்கு விமாலாராணி என்ற மனைவியும் , ஹரிஷ்ராகவ் என்ற மகன் உள்ளனர். இவர் ஓரகடம் தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார்.

இந்நிலையில் அவரது சகோதரர் சக்திவேல் தனது தம்பி தங்கவேலை தொலைபேசியில் தொடர்பு கொண்ட போது அவரது மனைவி விமலா ராணி மகன் ஆன்லைன் கிளாஸில் இருப்பதாக தெரிவித்து விட்டு தொடர்பை துண்டித்துள்ளார்.

மீண்டும் கடந்த 1ம் தேதி தொலைபேசியில் மீண்டும் தொடர்பு கொண்ட போது தொலைபேசி அழைப்பை ஏற்கவில்லை. மீண்டும் 2ம் தேதி காலை சுமார் 9.30 மணிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது ஸ்விட்ச் ஆஃப் என வந்ததால் சந்தேகமடைந்தார்.

தங்கவேல் அப்பா சோமமங்கலம் காவல் நிலையத்தில் தங்கவேல், அவரது மனைவி விமலா ராணி, பேரன் ஹரிஷ் ராகவ் ஆகியோரை காணவில்லை என புகார் அளித்தார். அதன்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் நேற்று இரவு 7 மணியளவில் காணாமல் போன தங்கவேலின் மனைவி விமலாராணி அவரது மகன் ஹர்ஷாராகவ் உடன் காவல்நிலையத்தில் சரண்டர் ஆகி, தன் கணவரை கடந்த 28ம்தேதி மதியம் அவர்களுக்குள் ஏற்பட்ட தகராறு காரணமாக அருவாமனையால் அவரது கழுத்தில் 2 முறை வெட்டியதால் சம்பவ இடத்தில் அவர் இறந்துவிட்டதாக கூறினார்

இரவு 10 மணி வரை பிரேதத்தை வீட்டின் பெட்ரூமில் மறைத்து வைத்து அதன்பின் தனது கள்ளகாதலனான சேலத்தை சேர்ந்த ராஜா என்பவரை வரவைத்து அருகில் உள்ள ஏரியில் பிரேதத்தை வீசி விட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளார்

மேற்படி பிரேதத்தை இன்று காலை 8 மணிக்கு ஏரியில் இருந்து எடுக்க உள்ளனர், மேற்படி ராஜாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர்

Updated On: 11 Aug 2021 4:30 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அடிக்கடி முகத்தில் சவரம் செய்தால் முடி அடர்த்தியாக வளருமா?
  2. உலகம்
    உலகில் அதிக எண்ணிக்கையில் இந்தியர்கள் வசிக்கும் நாடுகள் குறித்து...
  3. லைஃப்ஸ்டைல்
    ராகி தோசை மற்றும் தேங்காய் சட்னி செய்வது எப்படி?
  4. லைஃப்ஸ்டைல்
    கருவுற்ற தாய்மார்களுக்கு ஏற்படும் தைராய்டு பிரச்னைகளை தடுப்பது...
  5. மேட்டுப்பாளையம்
    மேட்டுப்பாளையத்தில் 1.15 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. தொழில்நுட்பம்
    ஏலியன் நாகரிக அறிகுறிகளைக் காட்டும் 7 நட்சத்திரங்களை கண்டறிந்த...
  7. லைஃப்ஸ்டைல்
    வண்ண வண்ணமாக அரிசி..! எது ஆரோக்யம்..?
  8. கோவை மாநகர்
    சட்டமன்றத் தேர்தல் கூட்டணியை காங்கிரஸ் தலைமை தான் முடிவு செய்யும் :...
  9. லைஃப்ஸ்டைல்
    வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் சத்தான பானங்கள் பற்றித் தெரியுமா?
  10. லைஃப்ஸ்டைல்
    குளிர்சாதன பெட்டியில்(Fridge) வைக்கக்கூடாத பழங்கள்..!