/* */

கொரோனா பரவலை தடுக்க ஸ்ரீபெரும்புதூர் கார் நிறுவனம் உற்பத்தி நிறுத்தம்

கொரோனா பரவலை தடுக்க ஸ்ரீபெரும்புதூர் ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் தனது உற்பத்தியை 29ஆம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளது.

HIGHLIGHTS

கொரோனா பரவலை தடுக்க ஸ்ரீபெரும்புதூர் கார் நிறுவனம் உற்பத்தி நிறுத்தம்
X

ஹூண்டாய் கார் கம்பெனி தொழிலாளர்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியிடப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் இருங்காட்டுக் கோட்டை பகுதியில் அமைந்துள்ள பிரபல ஹூண்டாய் கார் கார் நிறுவனம் இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் , அக்கறையும், பொறுப்பும் மிக்க ஒரு நிறுவனமாக ஹூண்டாய் மோட்டார் இந்தியா நிலவும் கொரோனா 2ம் அலை காலகட்டத்தில் நாடு முழுவதும் உள்ள தனது பணியாளர்களுக்கு உதவ பல்வேறு தொடர் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இத்தகைய கடினமான சூழலில் அவர்கள் அனைவரது ஆரோக்கியம் மற்றும் நலனை உறுதிசெய்ய முனைப்புடன், பல முற்போக்கான நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

தற்போது நிலவும் பெருந்தொற்று சூழலில் காரணமாக தொழிற்சாலை இயக்கத்தை அடுத்த 5 நாட்களுக்கு அதாவது நாளை 25 மே 2021 முதல் 29 மே 2021 வரை நிறுத்திவைக்க ஹூண்டாய் நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. இதன் பின்னர் தொழிற்சாலை இயக்கம் மீண்டும் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது..

Updated On: 24 May 2021 2:00 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    தட்டுப்பாடின்றி குடிநீர் வழங்க உடனடி நடவடிக்கை: அதிகாரிகளுக்கு...
  2. கலசப்பாக்கம்
    செய்யாற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: கூடுதல் தலைமைச் செயலாளர் ஆய்வு
  3. திருவண்ணாமலை
    பள்ளி வாகனங்களை வேகமாக இயக்கினால் கடும் நடவடிக்கை: கலெக்டர்
  4. நாமக்கல்
    ராசிபுரத்தில் தெருநாய்கள் கடித்ததில் 3 சிறுவர்கள் காயம்:...
  5. திருவண்ணாமலை
    கோடை காலத்தில் கால்நடைகளை பராமரிக்கும் முறைகள்
  6. திருவள்ளூர்
    திருவள்ளூர் அருகே சாலை சீரமைக்கக்கோரி கிராம மக்கள் போராட்டம்
  7. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  8. குமாரபாளையம்
    மாரியம்மன் திருவிழாவில் அக்னி சட்டி ஏந்தி வேண்டுதல் நிறைவேற்றிய...
  9. திருவண்ணாமலை
    அட்சய திருதியை அன்று பல்லியை பார்த்தாலே போதுமாம்
  10. ஈரோடு
    கடம்பூர் அருகே சாலையின் குறுக்கே விழுந்த மூங்கில்களால் போக்குவரத்து...