/* */

ஸ்ரீபெரும்புதூர்: வெவ்வேறு இடங்களில் சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது!

ஸ்ரீபெரும்புதூரிர்ல இருவேறு இடங்களில் சாராயம் காய்ச்சிய மூவர் கைது செய்யப்பட்டனர். சாராயம் , ஊரல் பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர்: வெவ்வேறு இடங்களில் சாராயம் காய்ச்சிய 3 பேர் கைது!
X

கள்ளச்சாராயம் காய்ச்சியதாக பிடிபட்டவர்களையும், பிடித்த போலீசாரையும் காணலாம்.

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த எருமையூர் பகுதியை சேர்ந்தவர் தயாநிதி. இவரது தம்பி கலாநிதியுடன் இணைந்து வீட்டின் பின்புறம் உள்ள மறைவு பகுதியில் சாராயம் காய்ச்சி தருவதாக ஸ்ரீபெரும்புதூர் துணை காவல் கண்காணிப்பாளருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அதனடிப்படையில் ஸ்ரீபெரும்புதூர் காவல் துறையினர் உடனடியாக சம்பவ இடத்தை சோதனையிட்டதில் வீட்டின் பின்புறம் மறைத்து வைத்திருந்த 70 லிட்டர் சாராய உரலும் , 30 லிட்டர் எரி சாராயமும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிகழ்வின் போது தயாநிதி கையும் களவுமாக பிடிபட்டார். கலாநிதி காவல்துறை கண்டதும் தப்பி ஓடிவிட்டார்.

இதேபோல் கருமாங்கரை கிராம ஏரிக்கரையில் அதே பகுதியை சேர்ந்த முரளி , வினோத் , எல்லப்பன் ஆகிய மூவர் சாராயம் காய்ச்சுவதுவதாக வந்த ரகசிய தகவலையடுத்து அங்கு மாறுவேடத்தில் சென்ற சோமங்கலம் காவல்துறையினர் சாராயம் காய்ச்சில் ஈடுபட்டிருந்த மூவரை கையும் களவுமாக பிடிக்க முயன்றபோது முரளி என்பவர் தப்பி ஓடி விட்டார்.

வினோத் மற்றும் எல்லப்பன் ஆகிய இருவரை காவல்துறை கைது செய்து அங்கு காய்ச்சி வைக்கப்பட்டிருந்த 50 லிட்டர் எரிசாராயத்தை பறிமுதல் செய்து வழக்குப்பதிவு செய்தனர். ஸ்ரீபெரும்புதூர் காவல் கோட்டத்தில் இருவேறு இடங்களில் சாராயம் காய்ச்சுவது பிடிபட்டதும் இதுதொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டும் , இருவர் தலைமறைவாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.

நேற்று இதே பகுதியை சேர்ந்த ஒருவர் தின்னர் கெமிக்கல் எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்து உயிர் இழந்ததும் அதை உடன் குடித்த இருவர் தற்போது அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவிலும் மற்றொருவர் தப்பி ஓடியதும் அதைத் தொடர்ந்து நடத்தப்பட்ட காவல்துறை வேட்டையில் இந்த இரு சம்பவங்களும் சிக்கியது என தெரியவந்துள்ளது.

Updated On: 27 May 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  2. வந்தவாசி
    ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் டெங்கு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி
  3. திருவண்ணாமலை
    மாவட்ட அளவில் ஒப்பந்ததாரராக பதிவு செய்யும் முறைகள்: கலெக்டர் தகவல்
  4. ஈரோடு
    ஈரோடு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை: செல்வப்பெருந்தகை...
  5. லைஃப்ஸ்டைல்
    வாழைத்தண்டுகளில் நிறைந்திருக்கும் மருத்துவ நன்மைகள் பற்றி தெரியுமா?
  6. லைஃப்ஸ்டைல்
    கணவன் மனைவி ஒற்றுமையை வலுப்படுத்த ஐந்து வழிகள் என்னென்ன தெரியுமா?
  7. லைஃப்ஸ்டைல்
    வீட்டிலேயே கறி மசாலா பொடி தயாரிப்பது எப்படி?
  8. லைஃப்ஸ்டைல்
    சுவையான ரசப்பொடி, வீட்டிலேயே தயாரிப்பது எப்படி?
  9. லைஃப்ஸ்டைல்
    இரவில் தூக்கமின்றி தவிக்கிறீர்களா?
  10. அரசியல்
    காங்கிரஸுக்கு அவர்கள் ஆட்சியில் இருந்தால்தான் ஜனநாயகம்: பிரதமர்...