ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ராகுல்காந்தி அஞ்சலி

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் காந்தி நினைவகத்தில் அஞ்சலி செலுத்தினார் ராகுல் காந்தி எம்.பி.
இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும்,எம்.பி யுமான ராகுல்காந்தி கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரை பாரத் ஜோதா யாத்ரா என்ற இந்திய ஒற்றுமை பாதயாத்திரை செல்கிறார்.
மத்திய பா.ஜ.க. அரசின் தவறான செயல்பாடுகள், கொள்கைகள் காரணமாக பொருளாதாரம், அரசியல், சமூகம் என அனைத்து வகையிலும் பிளவுபட்டுள்ள இந்தியாவை ஒன்றிணைக்க இந்த பாதயாத்திரையை ராகுல் காந்தி மேற்கொள்வதாக காங்கிரஸ் கட்சி மேலிடமும் அறிவித்துள்ளது.
தமிழகம், கேரளா, கர்நாடகா உள்ளிட்ட 12 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்கள் வழியாக ராகுல்காந்தி 3570 கி.மீ. தூரத்தை நடந்தே சென்று காஷ்மீரை அடையும் வகையில்150 நாட்களுக்கு நடைபெறும் இந்த பாதயாத்திரையின் தொடக்க விழா இன்று மாலை கன்னியாகுமரியில் துவங்கியது.
இந்நிலையில் இந்த இந்திய ஒற்றுமை பாதயாத்திரை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனது தந்தை ராஜீவ்காந்தி நினைவிடத்திற்கு அஞ்சலி செலுத்த ராகுல் காந்தி சென்னையிலிருந்து இன்று காலை சாலை மார்க்கமாக காரில் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வந்தடைந்தார். அவருக்கு அங்கு கட்சியின் மூத்த தலைவர்கள்,நிர்வாகிகள்,தொண்டர்கள் சிறப்பான வரவேற்பை அளித்தனர்.
அதன் பின் ராஜீவ் காந்தி நினைவிடத்தில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது உருவப்படத்திற்கு ராகுல் காந்தி மலர் தூவி மரியாதை செலுத்தினார்.அதன் பின் சுமார் இரண்டு நிமிடம் தரையில் அமர்ந்துக் கொண்டு ஆழ்ந்த தியானத்திலும் அவர் ஈடுபட்டார்.
அதன் பின் ராஜீவ் காந்தி நினைவிடத்தின் நுழைவு வாயில் முன்பு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் கொடியை ராகுல் காந்தி ஏற்றி வைத்து பின் அங்கிருந்து காரில் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டு சென்றார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu