/* */

போதை மாத்திரைகளை விற்பனை: வட மாநில தம்பதி கைது

ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் வட மாநில தொழிலாளர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக காவல்துறைக்கு புகார் வந்தது.

HIGHLIGHTS

போதை மாத்திரைகளை விற்பனை: வட மாநில  தம்பதி கைது
X

போதை மருந்துகள் வைத்திருந்ததாக கைது செய்யப்பட்ட நசீமா பேகம், அழருல் இஸ்லாம்

ஸ்ரீபெரும்புதூர் அருகே போதை மாத்திரைகளை விற்பனை செய்து வந்த வடமாநில தம்பதி கைது செய்யப்பட்டு அவர்களிடம் இருந்து போதை மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டது.

தொழிற்சாலைகள் மாவட்டம் என அழைக்கப்படும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் சுங்குவார்சத்திரம், ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம், இருங்காட்டுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பல்லாயிரக்கணக்கான தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இதில் தமிழகம் மட்டும் இல்லாது வடமாநிலத்தைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் இங்கு பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கீவளூர் பகுதியில் 50-கும் மேற்பட்ட பன்னாட்டு தொழிற்சாலைகள் இயங்கி வருகிறது. இங்கு ஏராளமான வட மாநில தொழிலாளர்கள் வாடகை குடியிருந்து தனியார் நிறுவனங்களில் பணி செய்து வருகின்றனர். இங்கு பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களுக்கு போதை மாத்திரைகள் விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அப்பகுதியில் தீவிரமாக கண்காணித்து சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அதே பகுதியில் வாடகைக்கு குடியிருந்து வந்த அசாம் மாநிலதை சேர்த்த நசிமா பேகம் (22), அழருல் இஸ்லாம் (24) ஆகிய தம்பதியிடமிருந்து தடை செய்யப்பட்ட போதை மாத்திரைகள், ஊசி, போன்றவற்றை காவல்துறையினர் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்புதான் காஞ்சிபுரம் பகுதியில் நடைபெற்ற உள்ளாட்சி பிரதிநிதிகள் பொதுமக்களுடனான குற்ற சம்பவங்கள் தடுப்பு ஆலோசனை கூட்டத்தில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்கப்படுவது குறித்து பொதுமக்கள் தகவல் அளித்தால், அவர்களது தனிப்பட்ட விபரம் ரகசியமாக வைக்கப்பட்டு, அவர்கள் அளித்த தகவலின்பேரில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்திருந்தார்.

இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் அருகே போதை மாத்திரைகள் விற்ற வட மாநில தம்பதியினர் கைது செய்யப்பட்டது பரபரப்பையும் மகிழ்ச்சியும் அளித்தது.

மேலும் ஸ்ரீபெரும்புதூர் பகுதிகளில் கஞ்சா விற்பனையை தடை செய்ய காவல்துறை தீவிரமாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், இதனால் அனைத்து சமூக இளைஞர்களும் சீரழிந்து வருவதும் பலர் குற்ற செயல்களில் ஈடுபடுவதும் வாகன விபத்துகளில் சிக்குவதுமாக உள்ளதால் இதனை காவல்துறை தொடர்ந்து வேட்டை நடவடிக்கை எடுத்து ஒழுங்குபடுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

Updated On: 3 Feb 2023 10:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    வெந்தயம் ஊறவைத்த நீரில் இத்தனை மருத்துவ குணங்கள் இருக்குதா?
  2. லைஃப்ஸ்டைல்
    தேங்காய் எண்ணெயில் இத்தனை விஷயங்கள் இருக்குதா?
  3. ஆன்மீகம்
    வீட்டில் தினமும் விளக்கேற்றுவதால் இத்தனை மகத்துவங்கள் ஏற்படுகிறதா?
  4. ஆன்மீகம்
    அஷ்டமி, நவமி என்றால் என்னவென்று தெரிந்துக் கொள்ளலாமா?
  5. லைஃப்ஸ்டைல்
    குக்குரில் வெண்ணிலா கேக் செய்வது எப்படி?
  6. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  7. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  8. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  9. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  10. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?