/* */

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆக்கிரமித்த அரசு நிலம்; வருவாய்த்துறையினர் மீட்பு

ஸ்ரீபெரும்புதூர் அடுத்த காட்ராம்பாக்கம் பகுதியில் தனியார் நிறுவனம் ஆக்கிரமித்த அரசு நிலத்தை வருவாய்த்துறையினர் மீட்டனர்.

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆக்கிரமித்த அரசு நிலம்; வருவாய்த்துறையினர் மீட்பு
X

ஆக்கிரமிப்பு பகுதியை ஜேசிபி இயந்திரம் மூலம் அகற்றிய வருவாய்த்துறையினர்.

சென்னை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவர் திருப்பெரும்புதூர் அருகே காட்ரம்பாக்கம் கிராமத்தில் உள்ள தனக்கு சொந்தமான நிலத்தில் பன்றி, ஆடு, கோழி பண்ணை நடத்தி வருகிறார்.

இவர், சர்வே எண்:367/3 ல் உள்ள அரசு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக வருவாய் துறையினருக்கு புகார் வந்தது. இதனையடுத்து, புகாரின் பேரில் தண்டலம் குறு வட்டு வருவாய் ஆய்வாளர் விமல்ரோஸ் சம்பவ இடத்தை ஆய்வு செய்தார். உடன் கிராம் நிர்வாக அலுவலரும் சென்றிருந்தார்.

இந்நிலையில் அரசு நிலம் ஆக்கிரமிப்பு செய்தது உறுதியான பின், வருவாய் கோட்டாட்சியர் முத்துமாதவன் உத்தரவின் பேரில் வருவாய்த்துறையினர், காவல்துறை பாதுகாப்புடன் ஆக்கிரமிப்பு இடத்திலுள்ள வேலிகளை ஜேசிபி உதவியுடன் அகற்றி நிலத்தை மீட்டனர்.

Updated On: 20 Aug 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. இந்தியா
    ஸ்டாலின் கைது செய்யப்படுவார்: கெஜ்ரிவால் திடீர் கண்டு பிடிப்பு
  2. வீடியோ
    மூன்று வருட திமுக ஆட்சி நிறைவு | சவுக்கு சங்கர் கைது | மக்களின் மனநிலை...
  3. இந்தியா
    4ம் கட்டமாக 96 நாடாளுமன்ற தொகுதி, ஆந்திர சட்டசபைக்கு நாளை தேர்தல்
  4. கல்வி
    கல்லூரி சேர்க்கையில் வெளிமாநில மாணவர்களால் பாதிப்பா?
  5. நாமக்கல்
    நீர்நிலைகளை மறைத்து சிப்காட்: தடுப்பு அணையில் நின்று விவசாயிகள்...
  6. தொழில்நுட்பம்
    இ-காமர்ஸ் சுரண்டல் அட்டை..! புதிய மோசடி..! உஷார் மக்களே..!
  7. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  8. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  9. லைஃப்ஸ்டைல்
    மனம் விட்டுப் பேசு... மனமே லேசு!
  10. லைஃப்ஸ்டைல்
    உங்கள் மனைவியுடன் சண்டையிட்ட பிறகு சமாதானம் செய்வது எப்படி?