/* */

ஸ்ரீபெரும்புதூர் அருகே 2.5 லட்சம் மதிப்பிலான இரும்பு பிளேட்டுகளை திருடிய 5 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் லிஃப்ட் தொழிற்சாலையில் 2.5 லட்சம் மதிப்பிலான இரும்பு பிளேட்டுகளை திருடிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர் அருகே 2.5 லட்சம் மதிப்பிலான இரும்பு பிளேட்டுகளை திருடிய 5 பேர் கைது
X

ஸ்ரீபெரும்புதூர் அருகே தனியார் தொழிற்சாலையில் இரும்பு பிளேட்டுகளை திருடியதாக கைது செய்யப்பட்ட நபர்கள்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த செங்காடு பகுதியில் அமைந்துள்ளது ஜான்சன் லிஃப்ட் தனியார் தொழிற்சாலை.

இத் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட சுமார் 2.5 லட்சம் மதிப்பிலான இரும்பு பிளேட்கள் காணவில்லை என கம்பெனியின் துணை பொது மேலாளர் ராஜா என்பவர் கடந்த 12ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

அதன் பேரில் வழக்கு பதியப்பட்டு உடனடியாக பொருட்களை மீட்க மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகரன் ஸ்ரீபெரும்புதூர் ஆய்வாளர் கிருஷ்ணகுமார் தலைமையில் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார்.

அதன்பேரில் அதன்பேரில் விசாரணை மேற்கொண்டதில் இடையார்பாக்கம் பகுதியை சேர்ந்த ராமன், ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த ஜெயவேல் மற்றும் அருண்குமார் , மேல்கொண்டையூரை சேர்ந்த சிவா, திருவள்ளூரை சேர்ந்த சீனிவாசன் ஆகியோர் கூட்டாக இணைந்து இத்திருட்டை செய்தது தெரியவந்தது.

அதனடிப்படையில் அவர்களிடம் இது பொருள்களை மீட்டு அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர்.

Updated On: 22 July 2021 1:15 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    😢ரொம்பவே எதிர்பார்த்து வந்தோம்! 😪இப்படி கவுத்து விட்டாங்களே! CSK...
  2. இந்தியா
    தெலங்கானா முன்னாள் முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பிரசாரம் செய்ய தேர்தல்...
  3. வேலூர்
    வேலூரில் 110 டிகிரி பாரன்ஹீட்டைத் தாண்டிய வெயில்!
  4. வீடியோ
    அரசியல்வாதியான Aranthangi Nisha | பக்கத்தில் நிற்க வைத்து கலாய்த்த...
  5. கும்மிடிப்பூண்டி
    பெரியபாளையத்தில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா!
  6. வீடியோ
    லாரன்ஸ் சேவை செய்ய காரணமென்ன ?| உண்மையை உடைத்த SJ Suryah |#sjsuryah...
  7. வீடியோ
    SJ Suryah போல பேசிய Lawrence Master | Raghava Lawrence | #maatram...
  8. தமிழ்நாடு
    தெரியாத அதிசயங்கள்! தெரிந்த கோயில்கள்!
  9. தமிழ்நாடு
    ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்தார்கள்! இயற்கை வளங்களை அழிக்கவில்லை!
  10. சினிமா
    கற்பனை என்றாலும்... கற்சிலை என்றாலும் கந்தனே உனை மறவேன்....!