/* */

காஞ்சிபுரம் அருகே தங்கை கணவருடன் கள்ளக்காதல், தற்கொலை செய்து கொண்ட பெண்

காஞ்சிபுரம் அருகே தங்கை தணவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்ட பெண் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் அருகே தங்கை கணவருடன் கள்ளக்காதல், தற்கொலை செய்து கொண்ட பெண்
X

 தற்கொலைக்கு தூண்டியதாக கைது செய்யப்பட்ட ஜோசப்.

காஞ்சிபுரம் மாவட்டம் , குன்றத்தூர் வட்டம் வரதராஜபுரம் பகுதியை சேர்ந்தவர் பொன்னுரங்கம் இவர் பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவரது மனைவி செண்பகவல்லி மற்றும் 2 மகள் மற்றும் மகனுடன் வசித்து வருகிறார்.

இந்நிலையில் செண்பகவல்லி தன் தங்கை லாவண்யாவிற்கு ஜோசப் என்பவரை கடந்த 6 வருடங்களுக்கு முன்பு திருமணம் செய்து கொடுத்துள்ளார்.

இவர்களுக்கு ஒரு குழந்தை இருந்த நிலையில் இரண்டாவது பிரசவத்திற்கு மருத்துவமனைக்கு சென்றபோது லாவண்யா இறந்துள்ளார்.

கைக்குழந்தை மற்றும் 4 வயது குழந்தையுடன் ஜோசப் செண்பகவல்லி என் வீட்டு மாடியில் தங்கியிருந்துள்ளார். அப்போது ஜோசப்பும் செலவழிக்கும் இடையே தவறான உறவு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் ஜோசப்புக்கு அமிர்தா என்ற பெண்ணுடன் கடந்த ஒரு வருடகாலமாக பழக்கம் ஏற்பட்டது. இதனால் செண்பகவல்லி க்கும் ஜோசப்புக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

நேற்று பகல் 12 மணியளவில் செண்பகவல்லி அவருக்கும் ஏற்பட்ட தகராறின் முடிவில் ஆடியோ ஒன்றை பதிவிட்டு அதை தனது கணவருக்கு அனுப்பிவிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

அதில் தற்கொலைக்கு காரணம் ஜோசப் என்றும் தன்னை அதிக அளவு மன உளைச்சலுக்கு ஆளாக்கியதாவும் தன்னை அடித்துத் துன்புறுத்தியதாகவும் கூறியதைத் தொடர்ந்து அவரது கணவர் பொன்னுரங்கம் அளித்த புகாரின் பேரில் சோமங்கலம் காவல்துறையினர் பெண் வன்கொடுமை தடுப்பு சட்டம் , தற்கொலை தூண்டுதல் ஆகிய பிரிவுகளின் கீழ் ஜோசப்பை இன்று கைது செய்தனர்.

பிறந்த குழந்தையை கை விட மனமில்லாமல் அதன் தந்தையுடன் தகாத நட்பு கொண்டு தற்போது தனது குடும்பத்தை தொலைத்த பெண்ணின் மரணம் கூடா நட்பு கேடாய் விளையும் என கூறும் பழமொழிக்கு உதாரணமாக அமைந்துவிட்டது.

Updated On: 21 July 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  2. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  3. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  4. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  5. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  6. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  7. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு
  8. ஈரோடு
    சென்னிமலையில் வீடுகளுக்குள் புகுந்த மழை வெள்ளம்..!
  9. லைஃப்ஸ்டைல்
    சுருங்க சொல்லி விளங்க வைக்கிறேன்..! SMS பிறந்தநாள் வாழ்த்து..!
  10. குமாரபாளையம்
    அரசு அனுமதியின்றி செயல்பட்ட பார் மூடல்; கலெக்டர் உத்தரவு