/* */

இரவு பணியின் போது தொழிலாளர்களுக்கு உணவு அளிக்க கோரி கலெக்டரிடம் மனு

ஸ்ரீபெரும்புதூர் அருகே ஆட்டோமொபைல் தொழிற்சாலையில் தொழிலாளர்களுக்கு இரவு உணவு வழங்க கேட்டு கலெக்டரிடம் மனு அளித்தனர்.

HIGHLIGHTS

இரவு பணியின் போது தொழிலாளர்களுக்கு உணவு அளிக்க கோரி கலெக்டரிடம் மனு
X

 காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க வந்த தனியார் தொழிற்சாலை ஊழியர்கள்

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த போந்தூர் பகுதியில் இயங்கி வருகிறது மதர்சன் ஆட்டோமொபைல் உதிரி பாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலை அமைந்துள்ளது.

இங்கு நிரந்தர பணியாளர்களாக 350 தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாக 1500க்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

இங்கு இரவு பணியில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு இரவு உணவு அளிக்க மறுத்து வருவதாகவும் உணவு இடைவேளை கூட விட மறுத்து வருவதாகவும் கூறி கடந்த ஒரு மாத காலமாகவே தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் இன்று நூற்றுக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தொழிற்சாலை நிர்வாகத்துக்கு அறிவுரை கூறி தொழிலாளருக்கு உணவு வழங்க பரிந்துரை செய்ய வேண்டும் என கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

இதுகுறித்து தொழிலாளர்கள் கூறுகையில் , உணவு இடைவேளை என்பதே இங்கு கிடையாது எனவும் பணிபுரிந்து வரும் இடத்திலே பிஸ்கட் பழம் என அளித்து விட்டு செல்வார்கள். நீண்ட நேரம் பணிபுரிய இது போதுமான உணவு இல்லை என்பதால் இரவு உணவு அளிக்க கோரி வருகிறோம் என தெரிவித்தனர்.

Updated On: 6 Aug 2021 8:00 AM GMT

Related News

Latest News

  1. அம்பாசமுத்திரம்
    நெல்லை மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  2. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  3. வீடியோ
    🔴 LIVE : Instagram-மில் ஹீரோணி தேடும் SOOR ! பங்கமாய் கலாய்த்த SK !...
  4. மாதவரம்
    கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த ரவுடி கைது
  5. லைஃப்ஸ்டைல்
    சமூக வலைத்தளங்களில் பொங்கல் வாழ்த்துக்களை பகிர்ந்து கொள்வதில் சில...
  6. லைஃப்ஸ்டைல்
    தமிழர் பெருமையை சொல்லும் திருநாள் வாழ்த்துகள்!
  7. கோவை மாநகர்
    அப்பாவி மக்களின் நிலத்தை பறிக்கும் யானை வழித்தடங்கள்: வானதி சீனிவானசன்...
  8. லைஃப்ஸ்டைல்
    அம்மு குட்டி செல்லத்துக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    காலை வணக்கம் சொல்லும் இளம்காலை நேரக்காற்று!
  10. இந்தியா
    போதையில் கார் ஓட்டி ஏற்படுத்திய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு :...