/* */

கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை : மது பிரியர்கள் புகார்

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் மதுபானக் கடையில் அதிக கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவதாக மது பிரியர்கள் புகார் தெரிவித்து டாஸ்மாக் நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரிக்கை வைக்கின்றனர்.

HIGHLIGHTS

கூடுதல் விலைக்கு மதுபானம் விற்பனை : மது பிரியர்கள் புகார்
X

காஞ்சிபுரம் மாவட்டம் , ஶ்ரீபெரும்புதூரில் கூடுதல் விலைக்கு மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக மது பிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.(பைல் படம்)

காஞ்சிபுரம் மாவட்டம் , ஶ்ரீபெரும்புதூர் பகுதியில் கடை எண் 4475 கொண்ட டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது. இந்த கடையில் மதுபானங்கள் வாங்க வருபவர்களிடம் அதிக தொகை வசூலிக்கப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு கூறப்படுகிறது.

குவார்ட்டருக்கு 30 ரூபாயும், 750 மில்லி மதுபானத்திற்கு 50 ரூபாயும் அதிகமாக விற்பனை செய்யப்படுவதாக மதுப்பிரியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

அரசு மதுபான விலையை உயர்த்தாத நிலையில் ஏன் இக்கடையில் மட்டும் விலை அதிகரித்து இருக்கிறீர்கள் என்று கேட்டு தினத்தோறும் மது பிரியர்களுக்கும் டாஸ்மாக் பணியாளர் களுக்கும் வாக்குவாதம் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து அந்த கடையில் மது வாங்க வந்த மதுப்பிரியர்கள் சிலர் கூறுகையில், ஸ்ரீபெரும்புதூர் உள்ள கடையில் மட்டும் மதுபானங்களின் பாட்டில் குறிப்பிட்டுள்ள விலையை விட பாட்டிலின் அளவிற்கேற்ப ஏற்றவாறு ரூ.30 முதல் ரூ.60 வரை விலை அதிகரித்து விற்பனை செய்கின்றனர்.

மதுபானங்களின் விலையை அரசு உயர்த்தாதபோது, இக்கடையில் மட்டும் மதுபானங்களின் விலையை உயர்த்தியது ஏன் என்று தெரியவில்லை.

இதனால் மதுப்பிரியர்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு உள்ளோம். எனவே மாவட்ட நிர்வாகம் மற்றும் கலால்துறை அதிகாரிகள், இந்த டாஸ்மாக் கடையில் அரசு நிர்ணயித்த விலையில் மதுபானங்களை விற்பனை செய்யவும், கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவது குறித்தும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினர்.

இதனால் தினக்கூலி வேலை செய்து வரும் மது பிரியர்கள் மது விலை உயர்ந்து விற்கப்படுவதால் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளனர்.

Updated On: 24 Jun 2021 8:15 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    அன்பையும், அர்ப்பணிப்பையும் கொண்டாடும் "வயிர கல்யாணம்"
  2. திருப்பூர்
    ஜவுளி உற்பத்தியாளா்கள் ஒப்பந்த கூலியை வழங்க நடவடிக்கை எடுக்க...
  3. நாமக்கல்
    வைகாசி மாத முதல் ஞாயிற்றுக்கிழமை ஆஞ்சநேயருக்கு சிறப்பு அலங்காரம்
  4. லைஃப்ஸ்டைல்
    சரஸ்வதி பூஜையின் தோற்றமும் வாழ்த்துக்களும்
  5. லைஃப்ஸ்டைல்
    தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்களும் பாரம்பரிய கொண்டாட்டங்களும்
  6. லைஃப்ஸ்டைல்
    விநாயகர் சதுர்த்தியில் வாழ்த்து தெரிவிக்கும் பல வழிகள்
  7. நாமக்கல்
    நீரோடையை மறைத்து சிப்காட் அமைக்க எதிர்ப்பு; நாமக்கல்லில் விவசாயிகள்...
  8. லைஃப்ஸ்டைல்
    தினமும் காலைப் பொழுதுகளை மிக அழகாக்கும் காலை வணக்கம் கவிதைகள்!
  9. லைஃப்ஸ்டைல்
    உறவுகளுக்கு, நட்புக்கு அன்பின் வெளிப்பாடாக முன்கூட்டியே சொல்வோம்...
  10. லைஃப்ஸ்டைல்
    தீபாவளிக்கு போனஸாக, அட்வான்ஸ் வாழ்த்து சொல்வோம் வாங்க..!