/* */

கோயில் சிலைகள் சேதம்: கிராம‌மக்கள் சாலை மறியல்

சங்குவார்சத்திரம் அருகே துலசாபுரம் கிராமத்தில் கோயில் சிலைகள் உடைத்தவர்களை கைது செய்ய கோரி பொது மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

கோயில் சிலைகள் சேதம்: கிராம‌மக்கள் சாலை மறியல்
X

சாமி சிலைகளை சேதப்படுத்தியவர்களை கைது செய்ய கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் , ஸ்ரீபெரும்புதூர் வட்டம் , சுங்குவார்சத்திரம் அருகே துலசபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கண்டிவக்கம் கிராமத்தில் விநாயகர் கோயில் உள்ளது.

இந்த கோவிலில் உள்ள விநாயகர் சிலை, நவகிரக சிலைகள் மர்ம நபர்கள் உடைத்து சேதபடுத்தி உள்ளனர்.

மேலும் அதே பகுதியில் உள்ள ஸ்ரீ லட்சுமி அம்மன் கோவிலில் பிரகாரத்தின் வெளியில் உள்ள அம்மன் சிலையின் கை பகுதி சேதப்படுத்தப்பட்ட உள்ளனர்.

இதனை கண்ட அப்பகுதி மக்கள் சுங்குவார்சத்திரம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர்.

கோயில் சிலைகள் சேதபடுத்தபட்ட சம்பவம் அப்பகுதியில் வேகமாக பரவியது. இதனால் அப்பகுதி மக்கள் 50க்கும் மேற்பட்டோர்

எடையார்பாக்கம்-பிச்சிவாக்கம் சாலையில் மறியலில் போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சுங்குவார்சத்திரம் போலிசார், பொதுமக்களிடம் சிலைகளை சேதபடுத்திய மர்ம நபர்களை உடனே கைது செய்து நடவடிக்கை எடுப்பதாக கூறியதன் பேரில் பொது மக்கள் கலைந்து சென்றனர்.

இதனால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கபட்டது.

Updated On: 21 Jun 2022 12:00 PM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    மனைவியின் பிறந்தநாள்: அன்பையும் மதிப்பையும் காட்ட சிறந்த சந்தர்ப்பம்
  2. தமிழ்நாடு
    நாட்டாமைக்கு பா.ஜ.க.,வில் புதிய பதவி?
  3. வீடியோ
    🔴LIVE : பாரத பிரதமர் நரேந்திர மோடி வாரணாசியில் வேட்புமனு தாக்கல் ||...
  4. அரசியல்
    உதயநிதிக்கு புரோமோசன்! தமிழக அமைச்சரவை மாற்றம்?
  5. கோவை மாநகர்
    சவுக்கு சங்கரின் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
  6. தென்காசி
    தென்காசி மாவட்ட அணைகளின் இன்றைய நீர்மட்டம்
  7. கோவை மாநகர்
    11 ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த கோவை
  8. திருவள்ளூர்
    மின்சாரம் பாய்ந்து வடமாநில தொழிலாளி உயிரிழப்பு!
  9. லைஃப்ஸ்டைல்
    அம்மாவை இழந்தவர்களுக்கு அவர்களின் பிறந்தநாளில் செய்ய வேண்டியது என்ன?
  10. மாதவரம்
    புழல் மின் நிலையத்தில் திடீர் தீ விபத்து