/* */

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ் நினைவிடத்தில் காங்கிரஸார் மவுன போராட்டம்

கூட்டணி தர்மத்தை மீறியதாகக்கூறி, மன்ற தலைவர் பதவியை திமுக ராஜினாமா செய்ய வேண்டுமென்று வலியுறுத்தி, காங்கிரஸ் கட்சியினர் மவுன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர் ராஜீவ்  நினைவிடத்தில் காங்கிரஸார் மவுன போராட்டம்
X

ஸ்ரீ பெரும்புதூரில் உள்ள ராஜிவ் நினைவிடத்தில், போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் கட்சியினர்.  

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சியில் மொத்தமுள்ள 15 வார்டுகளில் திமுக 6, காங்கிரஸ் 1, அதிமுக 3 சுயேச்சைகள் 4 மற்றும் பாமக 1 வார்டுகளில் வெற்றி பெற்றன. இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி மன்றத்திற்கு, திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அருள்ராஜ் என்பவரின் மனைவி செல்வமேரி என்பவர் போட்டியிட்டார்.

பேரூராட்சி மன்ற தலைவர் பதவி காங்கிரஸுக்கு ஒதுக்கப்பட்டதால், திமுகவினர் கடும் அதிருப்தி அடைந்தனர். இதனிடையே, திமுகவின் நகர செயலாளர் சதீஸ்குமாரின் மனைவி சாந்தி என்பவர், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் செல்வமேரிக்கு எதிராக போட்டியிட்டு 11 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

மேலும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் உத்தரவை மீறி தோழமைக் கட்சிக்கு எதிராக போட்டியிட்டு கூட்டணி தர்மத்தை மீறி வென்றவர்கள், உடனடியாக பொறுப்பை விட்டு விலகி நேரில் வந்து தன்னை சந்தித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில், திமுக தலைமை கூறியதுபோல் கூட்டணி தர்மத்தை மீறியதாலும்,கூட்டணி தர்மத்தை பாதுகாக்க சேர்மன் பதவியில் இருந்து உடனடியாக அவர் ராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஸ்ரீபெரும்புதூர் சென்னை - பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள ராஜீவ் காந்தி நினைவிடத்தில் ஸ்ரீபெரும்புதூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் அருள்ராஜ் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீபெரும்புதூர் பேரூராட்சி காங்கிரஸ் உறுப்பினர் செல்வமேரி உள்ளிட்ட திரளான காங்கிரசார், சுமார் 10நிமிடங்கள் வரை தியானத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு ராஜீவ் காந்தி நினைவிடத்தின் நுழைவு வாயிலின் முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால் ஏராளமான போலீசார் அங்கு பாதுக்காப்பு பணிக்காக குவிக்கப்பட்டனர்.

Updated On: 7 March 2022 5:30 AM GMT

Related News

Latest News

  1. பாளையங்கோட்டை
    நெல்லை மாவட்ட இன்றைய காய்கறி விலை நிலவரம்
  2. திருவண்ணாமலை
    கோடை கால இலவச தடகளப் பயிற்சி முகாம்
  3. ஆரணி
    போக்ஸோவில் 20 ஆண்டுகள் தண்டனை பெற்றவா் விடுதலை
  4. ஈரோடு
    திம்பம் மலைப்பாதையில் மினி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து
  5. வந்தவாசி
    வந்தவாசியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் தாயும் மகனும் பாஸ்
  6. ஈரோடு
    பவானியில் வாகன சோதனையில் 12 கிலோ கஞ்சா பறிமுதல்: 3 பேர் கைது
  7. செங்கம்
    வாழைத் தோட்டத்தை தாக்கி வரும் கரும் பூசண நோயை கட்டுப்படுத்துதல்...
  8. நாமக்கல்
    நாமக்கல் உழவர் சந்தையில் இன்றைய காய்கறி, பழங்கள் விலை நிலவரம்
  9. வந்தவாசி
    ஸ்ரீ ராமானுஜரின் 1007 வது திருநட்சத்திர உற்சவ விழா
  10. பொன்னேரி
    பொன்னேரி அருகே ஸ்ரீனிவாச பெருமாள் திருக்கல்யாண வைபோகம்