/* */

குட்கா விற்ற 52 கடைகள் மீது வழக்கு பதிவு, 60 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்

ஸ்ரீபெரும்புதூர் பகுதியில் குட்கா விற்பனை செய்த 52 கடைகள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து, 60 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை பறிமுதல் செய்தனர்.

HIGHLIGHTS

குட்கா விற்ற 52 கடைகள் மீது வழக்கு பதிவு, 60 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் பறிமுதல்
X

பைல் படம்

தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட பான் மசாலா பொருட்களை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க தமிழக சுகாதார மற்றும் நல்வாழ்வு துறை அமைச்சர் மா, சுப்பிரமணியம் காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.

அவ்வகையில் ஸ்ரீபெரும்புதூர் காவல் கோட்ட எல்லைக்குட்பட்ட பகுதிகளில் இன்று அனைத்து காவல் நிலைய ஆய்வாளர்கள் தலைமையில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான் மசாலா பொருட்களை விற்று 52 கடைகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு அவர்களிடமிருந்து ரூபாய் 60 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை பறிமுதல் செய்து எச்சரித்தனர்.

மேலும் இவ்வாறு அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களை விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம். சுதாகர் தெரிவித்துள்ளார்.

Updated On: 25 July 2021 3:30 PM GMT

Related News

Latest News

  1. வீடியோ
    பிரச்சாரத்தின் முடிவில் மோடி ட்விஸ்ட்? ஜகா வாங்கிய கட்சிகள் || #bjp...
  2. திருவண்ணாமலை
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோவிலில் பிரதோஷ விழா
  3. ஈரோடு
    ஈரோடு: வெளிநாட்டு கல்வி உதவித்தொகை பெற பழங்குடியின மாணவர்கள்...
  4. லைஃப்ஸ்டைல்
    புத்தாண்டு நல்வாழ்த்துகள்: வாழ்க்கையை வண்ணமயமாக்கும் பொன்மொழிகள்
  5. குமாரபாளையம்
    குமாரபாளையத்தில் இரண்டு மணி நேரம் கொட்டிய கனமழை
  6. வீடியோ
    நாடாளுமன்றத்துக்கு வந்தது புதிய படை!அப்படி என்ன சிறப்பு ! || #crpf...
  7. லைஃப்ஸ்டைல்
    அறுபதாம் அகவை வாழ்த்துக்கள்: ஒரு புதிய அத்தியாயத்தின் ஆரம்பம்
  8. லைஃப்ஸ்டைல்
    அன்பு வாழும் கூடு..! புதுமனை புகுவிழா வாழ்த்து..!
  9. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கையின் இனிய பாடலுக்கு இதயப்பூர்வமான வாழ்த்துகள்
  10. குமாரபாளையம்
    சிவன் கோவில்களில் பிரதோஷ வழிபாடு