/* */

ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை நடத்திய சோதனையில் ரூ.2, 23,000 பறிமுதல் செய்யப்பட்டது.

HIGHLIGHTS

ஸ்ரீபெரும்புதூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
X

 ஸ்ரீ பெரும்புதூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம்.

ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம் சாலையில் அமைந்துள்ளது ஸ்ரீ பெரும்புதூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலகம். இங்கு வாகனப்பதிவு, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் நடைபெறுகிறது.

இந்நிலையில் இங்கு அதிகளவில் வாகன பதிவுகளுக்கு லஞ்சம் பெறுவதாக தொடர் புகார் வந்தது. இதனையடுத்து காஞ்சிபுரம் மாவட்ட ஊழல் தடுப்பு துறையினர் நேற்று டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையிலான 12பேர் கொண்ட குழுவினர்மாலை 5 மணிக்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் நுழைந்து திடீர் சோதனை மேற்கொண்டனர்.

இதில் கணக்கில் வராத ரூ.2.23 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலர் , மோட்டார் வாகன ஆய்வாளர் , அலுவலக ஊழியர்கள் ஆகியோரிடம் லஞ்ச ஒழிப்புத் துறையினர் இரவு வரை விசாரணை மேற்கொண்டனர்.

இது குறித்து வழக்கு பதிவு செய்து மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிகிறது.

Updated On: 1 Oct 2021 3:54 AM GMT

Related News

Latest News

  1. லைஃப்ஸ்டைல்
    உள்ளத்தின் உணர்வுகளை உன்னத வார்த்தைகளில் சொல்லும் பிறந்தநாள்...
  2. லைஃப்ஸ்டைல்
    ஞானம் தந்த மரியாதைக்குரிய மூத்தவர்களுக்கு இனிய பிறந்த நாள்...
  3. தேனி
    மூன்று நாட்களுக்கு சுற்றுலா போகாதீங்க ! தேனி மாவட்ட மக்களுக்கு...
  4. லைஃப்ஸ்டைல்
    முளைகட்டிய தானியத்தின் நன்மைகள் என்ன..? பார்க்கலாமா..?
  5. லைஃப்ஸ்டைல்
    வாழ்க்கை புத்தகத்தின் புதிய அத்தியாயம், திருமணம்..! வாழ்த்துவோமா..?
  6. விளையாட்டு
    மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் குறித்து ரோஹித் ஷர்மாவின் முதல் எதிர்வினை
  7. சோழவந்தான்
    சோழவந்தான் திரௌபதி அம்மன் கோவிலில் கீசகன் வதம்
  8. லைஃப்ஸ்டைல்
    அரிதாய் கிடைத்த மனித பிறப்பை மகிழ்ந்து கொண்டாடுவோம் வாங்க..!
  9. லைஃப்ஸ்டைல்
    வீட்டின் தூண்களாய், உலகின் ஒளியாய் விளங்கும் மகளிர் தினச் சிறப்பு...
  10. காஞ்சிபுரம்
    தொடங்கியது வரதராஜ பெருமாள் திருக்கோயில் பிரம்மோற்சவம்