மூத்த குடிமக்களுக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் தீர்ப்பு: ஆளுநர் தமிழிசை மகிழ்ச்சி

மூத்த குடிமக்களுக்கு ஆதரவாக  உச்சநீதிமன்றம் தீர்ப்பு: ஆளுநர் தமிழிசை மகிழ்ச்சி
X

 சுங்குவார்சத்திரம் அருகே தமிழ்நாடு மண்டல பிரம்மகுமாரிகள் இயக்க பொன்விழா‌ ஆண்டு விழாவில் குத்து விளக்கு ஏற்று நிகழ்ச்சி துவக்கி வைத்த தெலுங்கானா மற்றும் புதுவை மாநில ஆளுநர் டாக்டர் தமிழிசை சௌந்தர்ராஜன்

பிரம்ம குமாரிகள் இயக்கத்தின் 50 ஆவது ஆண்டு பொன்விழா காஞ்சிபுரம் அடுத்த சுங்குவார்சத்திரம் பகுதியில் நடைபெற்றது.

மூத்த குடிமக்களுக்கு ஆதரவாக அளித்த உயர்நீதி தீர்ப்பு மகிழ்ச்சியளிப்பதாக தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் டாக்டர்.தமிழசை சௌந்தர்ராஜன் தெரிவித்தார்.

தமிழ்நாடு மண்டல பிரம்மகுமாரிகள் இயக்க பொன்விழா‌ ஆண்டு விழா கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் நடைபெற்று வருகிறது.முதல்நாள் நிகழ்வு சென்னையில் நடைபெற்றது. இதையடுத்து சுங்குவார்சத்திரம் அருகே உள்ள பிரம்ம குமாரிகள் தியான தலைமை பயிற்சி நிலைய மையத்தின் அருகே இரண்டாம் நாள் நிகழ்ச்சி நடைபெற்றது.

இன்று காலை துவங்கிய நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டார்.அதனைத் தொடர்ந்து மாலையில் நடைபெற்ற நிறைவு விழாவில் தெலங்கானா மற்றும் புதுச்சேரி ஆளுநர் திருமதி தமிழிசை சௌந்தரராஜன் குற்றுவிளக்கை ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதனைத் தொடர்ந்து விழாவில் ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் பேசியதாவது: பிரம்ம குமாரிகள் இயக்கம் அன்பை பொதுமக்களுக்கு அளிக்கும் வகையில் மேற்கொள்ளும் முயற்சிகளை பெரிதும் வரவேற்பதாகவும் அன்பு, மகிழ்ச்சி என்ற சாவி நம் கையில் தான் உள்ளது. அதை எவ்வாறு வெளிப்படுத்துகிறோமோ அதன் மூலமே நாம் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்.

கடந்த சில தினங்களுக்கு முன்பு உச்ச நீதிமன்றம், மூத்த குடிமக்களின் சொத்துக்களை பெற்றுக்கொண்டு அவர்களை முதியோர் இல்லங்களில் சேர்த்து விடுவதால் அவர்கள் நினைத்தால் மீண்டும் அளித்த சொத்துக்களை திரும்ப பெற்றுக் கொள்ளலாம் என அளித்த தீர்ப்பை கண்டு பெருமகிழ்ச்சியுடைந்தேன். பூஜை பொருட்களான தேங்காய், வாழைப்பழம் வெற்றிலை இவை அனைத்தும் நாம் திரும்ப பெற்றுக் கொள்ளும் நிலையில், கற்பூரம் மட்டுமே தன்னை முழு அர்ப்பணிப்புடன் இறைவனுக்கு அளிப்பதை போல் பிரம்ம குமாரிகள் இயக்கம் பொதுமக்களுக்கு அன்பை வழங்குகிறது என்றார் தமிழிசை சௌந்தர்ராஜன்.

இதில் பேசிய பிரம்ம குமாரி இயக்க நிர்வாகிகள், பிரம்ம குமாரிகள் அமைப்பு ஆரம்பகாலத்தில் "ஓம் மண்டலி" என்ற பெயருடன் இந்தியாவின், அன்றைய சிந்து மாகாணத்தில் உள்ள ஐதராபாத்தில் ஆரம்பிக்கப்பட்டது. இப்பெயர் இதன் பின்பற்றுனர்கள் தமது ஒவ்வொரு ஆன்மீக வெளிப்படுத்தலின் போதும் "ஓம் சாந்தி" என சங்கல்பம் எடுத்துக் கொள்வதால் ஏற்பட்டது. இது பகவத் கீதையுடன் தொடர்புபட்ட சங்கல்பமாகும். இதை தொடங்கின தாதா லேக்ராஜ் (ஓம் பாபா என அழைக்கப்பட்டவர்).

தமிழக மண்டலத்தில் 250 க்கும் மேற்பட்ட கிளைகளைக் கொண்டு ஆன்மீகத்தை அளித்து மன அமைதி , மகிழ்ச்சி அனைத்தையும் மக்களுக்கு வழங்கி வருகிறது என தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் குமாரிகள் அமைப்பின் கூடுதல் பொது செயலாளர் பி.கே.பிரிஜ் மோகன், தமிழ்நாடு மண்டல சேவை ஒருங்கிணைப்பாளர் பி.கே.,பீனா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதில், தமிழ்நாடு, கேரளா, புதுச்சேரி ஆகிய மாநிலங்களில் இருந்து 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பிரம்மா குமாரிகள் அமைப்பினர் பங்கேற்று உலக அமைதிக்காக தியானம் செய்தனர்.


Tags

Next Story
அங்காளம்மன் கோவிலில் பக்தி நிறைந்த பெண்கள் பால்குட ஊர்வலத்தின் கோலாகலம்..!