/* */

காஞ்சிபுரம் : பள்ளி சென்ற மாணவன் மாயம், பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்

காஞ்சிபுரத்தில் தனியார் பள்ளிக்கு சென்ற மாணவன் காணவில்லை, நிர்வாகம் அலட்சியம் காட்டியதால், பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

HIGHLIGHTS

காஞ்சிபுரம் : பள்ளி சென்ற மாணவன் மாயம், பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்
X

பள்ளி மாணவன் மாயம் குறித்து விளக்கம் கேட்டு பள்ளியை முற்றுகையிட்ட பெற்றோர்கள் 

காஞ்சிபுரம் , ஏகாம்பரநாதர் வடக்கு மாடவீதியை சேர்ந்த கூலி தொழிலாளிமுருகன், இவரது மனைவி சுந்தரி . இவர்களுக்கு கெளதமன் , புருஷோத் என இரு மகன்கள் உள்ளனர்.

இதில் புருஷோத் ஏகாம்பரநாதர் திருக்கோயில் அருகே உள்ள தனியார் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் பள்ளிக் கட்டணம் கட்டாததால் பள்ளிக்கு செல்ல மறுத்த நிலையில் இன்று பள்ளியில் இருந்து அழைப்பு வந்ததன் பேரில் பள்ளிக்கு சென்றுள்ளார்.

பள்ளியில் இருந்து 10மணியளவில் வெளியே சென்ற மாணவன் வீடு திரும்பவில்லை. இந்நிலையில் மதிய உணவு அளிக்க வந்த அவரது பெற்றோரிடம் 10மணிக்கே சென்று விட்டதாக தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பெற்றோர்கள் பள்ளி நிர்வாகத்திடம் கேட்டபோது முறையான பதில்கள் தெரிவிக்காத காரணத்தால் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகம் காவல் துறையிடம் புகார் அளித்தும் நடந்தவற்றை தெளிவுபடுத்தியுள்ளனர். பெற்றோர் தரப்பில் பள்ளி மாணவன் மாயம் குறித்து புகார் அளிக்க காவல் நிலையம் சென்றுள்ளனர். இந்த சம்பவம் காஞ்சி புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Updated On: 11 Sep 2021 11:45 AM GMT

Related News

Latest News

  1. ஆன்மீகம்
    திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க தேவஸ்தானம் வெளியிட்டுள்ள அறிவிப்புகளை...
  2. லைஃப்ஸ்டைல்
    வைட்டமின் ஈ காப்ஸ்யூல் பயன்படுத்த அழகு டிப்ஸ்!
  3. லைஃப்ஸ்டைல்
    நீங்கள் கண் சிமிட்டிக் கொண்டே இருக்கறீங்களா?
  4. லைஃப்ஸ்டைல்
    பிரியும் விடைக்கு ஏன் பிரியாவிடை..?
  5. வானிலை
    வானிலை முன்னறிவிப்பு: டெல்லி, உ.பி., ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில்...
  6. இந்தியா
    ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முடிவுக்கு வந்த போராட்டம், இயல்பு நிலை...
  7. லைஃப்ஸ்டைல்
    தண்ணீரை மென்று சாப்பிடு; சாப்பாட்டை குடி..!
  8. லைஃப்ஸ்டைல்
    சந்தோஷம் மின்னல் போல வந்து வந்து போகும்; அமைதி எப்போதுமே நிரந்தரமானது...
  9. கோவை மாநகர்
    கோவை நகரப் பகுதிகளில் மிதமான மழை ; மக்கள் மகிழ்ச்சி
  10. வீடியோ
    Savukku வழக்கில் மூன்று நாட்களில் நடந்தது என்ன? | அடுத்து என்ன...