காஞ்சிபுரம் ம.நீ.ம வேட்பாளர் தீவிர பிரசாரம்

காஞ்சிபுரம் ம.நீ.ம வேட்பாளர் தீவிர பிரசாரம்
காஞ்சிபுரம் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர் கோபிநாத் தீவிர பிரசாரம் செய்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இன்னும் சில தினங்களே உள்ள நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தமக்கு ஆதரவாக வாக்களிக்க கோரி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்

அவ்வகையில் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு மக்கள் நீதி மைய வேட்பாளராக போட்டியிடும் எஸ்கேபி கோபிநாத் காலை 6 மணி முதலே காஞ்சிபுரம் ராஜாஜி மார்க்கெட் பகுதி தொழிலாளிகளிடம் காந்தி சாலை, ரங்கசாமி குளம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள ஹோட்டல், பழரசக்கடை, பட்டு நிறுவனங்கள், சாலையோர வியாபாரிகள் என பல இடங்களுக்கு சென்று கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் தொண்டர்களுடன் டார்ச் லைட் சின்னத்தில் வாக்களிக்க கோரி தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Tags

Next Story