காஞ்சிபுரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 464 மனுக்கள்

காஞ்சிபுரம் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 464 மனுக்கள்
X

மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வியிடம் மனுக்கள் அளித்த பொதுமக்கள்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் தலைமையில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் வளாகத்தில் நடைபெறுவது வழக்கம்.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் இன்று மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தலைமையில் நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியரகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மையத்தில் பிரதி திங்கட்கிழமை தோறும் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டு, அம்மனுக்கள் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு வழங்கி தீர்வு காணப்பட்டு வருகிறது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து 464 மனுக்களை பெற்று அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்து துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்கள்.

இன்று நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்,

குன்றத்தூர் வட்டம், கொல்லச்சேரி, கலைஞர் தெருவை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிவராஜ் அவர்கள் வழங்கிய மனு மீது மாவட்ட ஆட்சியர் உடனடி நடவடிக்கை எடுத்து, அவருக்கு ரூ.9,060/- மதிப்பிலான மூன்று சக்கர சைக்கிளை வழங்கினார்கள்.

இதனைதொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில், 10 மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு, மாற்றுத்திறனாளிகளுக்கான பாதுகாவலர் நியமன சான்றுகளையும் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை சார்பில், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் 10 அங்கன்வாடி பணியாளர்களுக்கு திறன் கைபேசிகளையும் மாவட்ட ஆட்சியர் வழங்கினார்கள்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஜெயக்குமார், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்ட அலுவலர் கந்தன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் தமலர்விழி மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story