/* */

காஞ்சிபுரம்: வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது; 2செல்போன்-3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!

காஞ்சிபுரத்தில் வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட 2 சிறுவர்கள் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 2 செல்போன், 3 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

HIGHLIGHTS

காஞ்சிபுரம்: வழிப்பறியில் ஈடுபட்ட 5 பேர் கைது; 2செல்போன்-3 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்!
X

கைதான லோகநாதன், பிரசாந்த், விவின் கேபா

காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் குரு கோவில் அருகே, ஒரகடத்தில் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பாலாஜி என்பவர், கடந்த 6-ம் தேதி இரவு 2 மணியளவில் பணியை முடித்துவிட்டு அவரது வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அடையாளம் தெரியாத நபர்கள் அவரிடம் கத்தியை காட்டி மிரட்டி செல்போனை பறித்துக்கொண்டு தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து பாலாஜி சிவகாஞ்சி காவல்துறையினரிடம் புகார் செய்தார். அதன் அடிப்படையில் சைபர் கிரைம் உதவியுடன் கிடைத்த தகவலின் அடிப்படையில் சென்னையில் பதுங்கியிருந்த பூந்தண்டலம் சேர்ந்த லோகநாதன் என்கிற லோகு (22), விருகம்பாக்கத்தை சேர்ந்த பிரசாந்த் (19), குன்றத்தூரை சேர்ந்த விவின் கேபா (19) மற்றும் இரண்டு சிறுவர்கள் என ஐந்து பேரை பிடித்து விசாரணை மேற்கொண்டதில் இவர்கள் தொடர்ந்து வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்டது தெரிந்தது.

இதையொட்டி இவர்கள் ஐந்து பேரையும் போலீசார் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மேலும் அவர்களிடமிருந்து வழிப்பறி செய்த 2 செல்போன்கள் மற்றும் திருடிச் சென்ற 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.

Updated On: 10 Jun 2021 12:15 PM GMT

Related News

Latest News

  1. பல்லடம்
    பல்லடத்தில் வெட்டப்பட்ட மரங்கள்; இயற்கை ஆர்வலர்கள் வேதனை
  2. லைஃப்ஸ்டைல்
    அப்பாவுக்கான பிறந்தநாள் வாழ்த்துகள் :
  3. லைஃப்ஸ்டைல்
    சர்வாதிகாரி என்ற வார்த்தையை உச்சரித்தாலே நினைவில் வரும் ஹிட்லர்
  4. லைஃப்ஸ்டைல்
    உழைக்கும் தோழர்களுக்கு ஒரு சல்யூட்..!
  5. குமாரபாளையம்
    சர்வ சக்தி மாரியம்மன் திருவிழா
  6. லைஃப்ஸ்டைல்
    ஒருபோதும் தன்னை நிரூபிக்க வேண்டியதில்லை. அதன் இருப்பு போதும்! அது தான்...
  7. தமிழ்நாடு
    புதுச்சேரி தேசிய தொழில்நுட்பக்கழகத்தின் புதிய இயக்குநர் பொறுப்பேற்பு
  8. கல்வி
    சென்னை சிப்பெட் வழங்கும் 3 ஆண்டு டிப்ளமோ படிப்புகள்: மாணவர் சேர்க்கை...
  9. லைஃப்ஸ்டைல்
    கஷ்டம் வரும்போது சிரிங்க..! துன்பம் தூசியாகும்..!
  10. வீடியோ
    Adani துறைமுகத்துல போதைப்பொருள் இருந்துச்சு என்ன நடவடிக்கை எடுத்தாங்க...