/* */

காஞ்சிபுரத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

காஞ்சிபுரத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட காவல் கண்காணிபபாளர் சுதாகர் துவக்கி வைத்தார்.

HIGHLIGHTS

காஞ்சிபுரத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
X

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார் எஸ்.பி. சுதாகர்

காஞ்சிபுரம் மாவட்டத்தில் போதை பொருட்கள் ஒழிப்பு மற்றும் அதை விற்பனை செய்வோர் மீது கடும் நடவடிக்கை காஞ்சி மாவட்ட காவல்துறை சார்பில் எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் இதனை பல்வேறு வயது தரப்பினரும் தற்போது பயன்படுத்த தொடங்கியதால் இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த காஞ்சி மாவட்ட காவல்துறை பல்வேறு நல சங்கங்களுடன் இணைந்து விழிப்புணர்வு பேரணிகள் நடத்தி வருகிறது.

அவ்வையில் காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள தனியார் மருந்தியல் கல்லூரி, காஞ்சிபுரம் மாவட்ட மருந்து வணிகர்கள் சங்கம் மற்றும் காஞ்சிபுரம் கிழக்கு ரோட்டரி சங்கம் இணைந்து போதைப் பொருட்கள் ஒழிப்பு மற்றும் மாபெரும் விழிப்புணர்வு பேரணியை நடத்தினர்.

இப்பேரணியை மாவட்ட ஆட்சியர் அலுவலக நுழைவு வாயிலில் காஞ்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் துவக்கி வைத்தார் . இப்பேரணி நகரின் முக்கிய வீதிகள் வழியாக பொது மக்களுக்கு பல்வேறு விழிப்புணர்வு கோஷங்களை எழுப்பி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

மேலும் பொது மக்களுக்கு போதைப் பொருட்கள் ஏற்படும் தீமைகள் மற்றும் உடல் உபாதைகள் குறித்த துண்டு பிரசுரங்களை நகர் முழுவதும் விநியோகித்தனர். இப்பேரணியில் கல்லூரி மாணவ மாணவியர்கள் ரோட்டரி கிளப் உறுப்பினர்கள் காஞ்சிபுரம் மாவட்ட மருந்து வணிகர்கள் என 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் கல்லூரி மாணவ மாணவியர்கள் போதைப் பொருட்களை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் எனவும் இதனை அதிக அளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தி நமது உறவினர்கள் மற்றும் பொதுமக்களை பயன்படுத்தாமல் தடுத்து விழிப்புணர்வு செய்ய வேண்டும் எனவும் காஞ்சி மாவட்டம் போதை பொருட்கள் எல்லாம் மாவட்டமாக உருவெடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என காவல்துறை சார்பில் எஸ்.பி.சுதாகர் கேட்டுக்கொண்டார்.

Updated On: 23 Sep 2022 9:30 AM GMT

Related News

Latest News

  1. திருப்பூர்
    திருப்பூருக்கு முதலிடம் கிடைக்குமா? - பிளஸ் 2 தேர்வு முடிவு நாளை...
  2. உடுமலைப்பேட்டை
    மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்
  3. லைஃப்ஸ்டைல்
    அலட்சியம்: தோல்விக்கான பாதையை நோக்கிய ஒரு பயணம்
  4. நாமக்கல்
    நாமக்கல்லில் 11 மையங்களில் நீட் தேர்வு 6,180 பேர் பங்கேற்பு: 120 பேர்...
  5. கவுண்டம்பாளையம்
    தடாகம் பகுதியில் 12 கிலோ கஞ்சா பறிமுதல் ; இருவர் கைது
  6. லைஃப்ஸ்டைல்
    மின்விசிறியா அல்லது காற்றூதியா? மின்சாரம் சேமிப்பது எது?
  7. காங்கேயம்
    சிறுமிக்கு பாலியல் தொல்லை; குண்டா் சட்டத்தில் 8 போ் கைது
  8. நாமக்கல்
    நாமக்கல்லில் முட்டை விலை உயர்வு!
  9. மேட்டுப்பாளையம்
    அன்னூரில் மழை வேண்டி கழுதைகளுக்கு திருமணம் செய்து வைத்த கிராம மக்கள்
  10. திருப்பூர்
    திருப்பூர்; மாணவா்களுக்கு கோடைகால கலைப் பயிற்சி முகாம்